தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசி ரியராக பணிபுரிந்து வந்த ஜி.என். சாய்பாபா மாவோயிஸ்ட்டுகளு டன் தொடர்பு வைத்திருந்ததா கக் கூறி, கடந்த 2014-ஆம் ஆண்டுசட்ட விரோத நடவ டிக்கைகள் தடுப் புச் சட்டத்தின் (UAPA) கீழ் மோடி அரசு கைது செய் தது. இந்த வழக்கில் ஜி.என்.சாய்பாபா உட்பட 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்து கடந்த 2017இல் ஆயுள் தண் டனை விதித்தது கட்ச்ரோலி அமர்வு நீதிமன்றம்.
இதனையடுத்து ஜி.என்.சாய்பாபா நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஜி.என்.சாய்பாபா உள் ளிட்ட 6 பேரும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்த னர். இதையடுத்து கடந்த 2022 அக்.14 அன்று ஜி.என்.சாய்பாபா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்தது நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை.
இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் புதிதாக விசாரணை செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை நாக்பூர் கிளையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடி வில் மார்ச் 5 அன்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தீர்ப்பு வழங்கியது. ஜி.என். சாய்பாபா உள்ளிட்ட 6 பேரையும் விடு தலை செய்வதாக தீர்ப்பு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழனன்று ஜி.என்.சாய்பாபா நாக்பூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.