india

img

அதிகாரத்திடம் உண்மையை பேசிய அச்சமற்ற எழுத்தாளர் நூரணி

புதுதில்லி இந்தியாவின் தலைசிறந்த அறிவு ஜீவிகளில் ஒருவ ரும், பிரபல வழக்கறிஞர் மற்றும் மூத்த அரசியல் ஆய்வாள ருமான அப்துல் கபூர் நூரணி  மறைந்தார். நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த நூரணி  அல்லது கபூர் பாய் இஷா தொழு கைக்குப் பிறகு மும்பையில்  ஒரு  கல்லறையில் நல்லடக்கம் செய்யப்  பட்டார்.அவருக்கு வயது 94. மர ணம் அவரை தழுவிய போது உச்ச நீதிமன்றத்தின் பாபர் மசூதி தீர்ப்பு  குறித்து ஒரு புதிய நூலை எழுதிக்  கொண்டிருந்தார்.

அப்துல் கபூர் நூரணி அரசியல்  அமைப்பு நிபுணர், கூரிய தனித்துவ மான புத்திசாலித்தனம், அரியதோர்  அறிவாற்றல், ஆழமான சட்ட அறிவு, இன்னும் பலவும் சேர்ந்தே அனைவரும் எதிர்பார்க்கும் சிறந்த  மாமனிதராக அவரை மாற்றியது.

அப்துல் கபூர் நூரணி 1960களின்  முற்பகுதியில் தனது எழுத்து  வாழ்க்கையை தொடங்கினார். நீண்ட, உணர்ச்சி செறிவான  கட்டுரைகள்  அவருடைய முத்திரையாகும். அதி காரமிக்கவர்களிடம் நெஞ்சை பிளந்து உண்மையைப் பேசும் துணிச்சல் மிக்கவர். அவசர நிலை  காலம் பற்றி எழுதும்போது இந்திரா  காந்தியின் செயல்களை அடால்ஃப்  ஹிட்லருடன் ஒப்பிட்டார். 2020இல்  சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக நரேந்திர ‘மோடியை நம் காலத் தின் துக்ளக்’ என அழைத்தவர்.

“ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல்” என்ற தனது  நூலின் முகவுரையில் “ஆர்எஸ்எஸ் இன் உண்மையான நோக்கங்கள் இந்திய நாடாளுமன்றத்தின் முடி வுகளுக்கும் இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானவை” என பாஜகவின் சித்  தாந்த ஊற்று மூலத்தை பற்றிய  ஜவஹர்லால் நேருவின் மேற் கோளை தைரியமாக மீண்டும் குறிப்பிட்டவர்:

காஷ்மீர் விவகாரங்களில் ஆளுமை நிறைந்த அறிவுக்கூர்மை யுடையவர். அயோத்தி மசூதி கோவில் சர்ச்சையில் மிக ஆழ மான கருத்துக்களை கொண்டவர். இதைப்பற்றி பல செய்தித் தாள்  களில் கட்டுரைகளையும்  மூன்று  நூலையும் எழுதி உள்ளார். அரசிய லமைப்பின் எந்த பிரிவையும் இயல்  பான எளிமையுடன் அவரால் மேற்  கோள் காட்ட முடியும். அதற்கு சற்  றும் குறையாமல் பிற நாட்டின் அரசி யல் அமைப்புகள் சட்டங்கள் குறித்  தும் ஆழ்ந்த அறிவை கொண்டி ருந்தவர். ஒரு பயிற்சி பெற்ற வர லாற்று ஆசிரியர் அல்ல. ஆனாலும்  அவர் வெளியிடும் உண்மைகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை. அவர் அளிக்கும் விளக்கங்களும்  மிகப் பரவலாக விவாதிக்கப்பட் டவை.

சட்ட வட்டாரங்களில் அவரு டைய பெயர் யாருக்கும் அச்ச மூட்டும். இலக்கிய வட்டங்களில் நேசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர். அவருடைய ஞானம்  ஒப்புவமையற்றது. நற்செயல் களை என்றும் மறவாதவர்.’தி ஸ்டேட்ஸ்மேன்’, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தவிர பாகிஸ்தானின்  ‘டான்  (DAWN)’ போன்ற பத்திரிகை களில் நீண்ட காலம் எழுதியவர். இந்து குழுமத்தின் தலைசிறந்த வெளியீடான ‘பிரண்ட்லைன்’ இத ழில் 30 வருடங்களுக்கு மேலாக கட்டுரைகளை  காலக் கிரமம் தவறாமல் எழுதி குவித்தவர். அவ ருடைய உடல் நலம் அனுமதிக்கும் வரையில் மலையிலிருந்து விழும்  நீர் வீழ்ச்சி போல அரசியலின் முடி வற்ற  சிக்கல்களை அவருடைய எழுத்துக்கள் கண்ணாடியாய் பிரதி பலித்தவை.

அவர் ஒரு தொன்மை வாய்ந்த  மனிதர். மும்பையில் அவருடைய  எழுத்துக்கள்  சுருக்கெழுத்து செய்ப வரால் மிகச் சரியாக பிழையின்றி தட்டச்சு செய்யப்பட்டு பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பப்படும். அவரு டைய இல்லம் புத்தகப் பிரியர் களுக்கு வேடந்தாங்கல். செய்தித் தாள்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நூலகம்.சிரத்தையுடனும் ஆர்வமுடனும் காலையில் கட்டுரைகளை நேர்த்தி யாக தேர்வு செய்து குறிப்புகள் எடுப்பார்.

இப்படி பல குறிப்பெடுத்த தாள்  கள் மலைபோல குவிந்த போதும்  எந்த ஒரு குறிப்பிட்ட விவரத்தை யும் நினைவு கூர்மையுடன் அதிலி ருந்து எடுத்து தருவார். எழுதுவதற் காக அவர் மேஜையை என்றும் பயன்படுத்தியது இல்லை.  நூற்றுக்  கணக்கான புத்தகங்களை வைத் துக்கொண்டு மெத்தைகள் சூழ்ந்த  தனது கட்டிலில் அமர்ந்துதான் எழுதினார். பல ஆண்டுகாலம் கணி னிகளை அவர் பயன்படுத்தியது இல்லை.

கள ஆய்வுகளை மேற்கொள் ளும் சிறந்த பயிற்சியாளர் அல்ல. என்றாலும் குறை இல்லாமல் விரி வாக படித்தவர். துல்லியமாக மேற்  கோள் காட்டுவதில் அவர் தவறி யதே இல்லை.

பக்தி சிரத்தை நிறைந்த ஒரு இஸ்லாமியர். பணிவு நிறைந்தவர் கோபத்திற்கும் குறைவில்லை.  இரண்டின் தனித்துவமான கலவை.  மும்பையின் ஜிம்கானா மன்றத்தி லும் புதுதில்லியின் இந்தியா சர்வ தேச மையத்திலும் உறுப்பினராக இருந்ததில் பெருமை கொண்ட வர். அங்கு அறை எண் 38ல் மட்டுமே  தங்குவார். ஒரு விமான பயணத்தில்  அவருடைய உணவு விருப்பத்தை பற்றி கேட்டபோது “சைவத்துக்கு எதிர்” என்று துடுக்காய் கூறினார்.  உண்மையில் அவர் ஒரு உணவுப்  பிரியர்.உணவை பற்றி கூட படிப்பார். ஒரு குறிப்பிட்ட உணவ கத்திற்கு,அது  சாலையோர உண வகமாக இருந்தாலும் செல்வது பற்றியும் மனதுக்குள் குறிப்பு எடுப்பார். அடிக்கடி சைக்கிள் ரிக்ஷா வை எடுத்துக்கொண்டு பழைய தில்லியின்  சந்து பொந்துகளுக்கு   செல்வார்.  பிரபல கரீம் அல்லது ஜவ கர் உணவகத்தில் இரவு உணவை  முடித்துக் கொள்வார்.

பம்பாயில் பிறந்தவர். ஆனா லும் தனித்துவமான அறிவு, புத்தி சாலித்தனம், அரசியல் அமைப்பு  விவகாரங்களில் ஆழ்ந்த ஞான த்தை பெற்று அனைவரும் மதிக் கக்கூடிய மாமனிதராக அவரை மாற்றிய (புதுதில்லி) நகரத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகு தியை கழித்தவர்.பரூக் அப்துல்லா,  அசாதுதீன் ஓவைசி போன்ற அரசி யல் தலைவர்கள் அவருக்கு அஞ்ச லியை உரித்தாக்கி உள்ளனர்.

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அப்துல் கபூர் நூரணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”அரசமைப்புச்சட்ட விஷயங்களில் அசாதாரணமான அறிவு படைத்த அப்துல் கபூர் நூரணி, மறை வுக்கு ஆழ்ந்த இரங்கல். கோல்வால்கரின் சித்தாந்தத்தைத் தோலு ரித்துக்காட்டிடும், “இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன” என்ற சிறு பிரசுரத்தை நான் 1993இல் வெளியிட்டசமயத்தில் அதனைப் படித்து  விட்டு என்னை வெகுவாகப் பாராட்டி மும்பையில் உள்ள அவரு டைய இல்லத்திற்கு என்னை அனைத்து  எனக்கு பிரியாணி ஊட்டி னார். அன்றிலிருந்து அவர் என் நெருங்கிய நண்பராகிவிட்டார். அவ ருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சீத்தாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

ஸியா உஸ் ஸலாம்

தி இந்து 30/8/24
தமிழில்: கடலூர் சுகுமாரன்