“திமுக ஆட்சிக்கு எதிராக எந்த விதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை என்பதால், கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எறிய எதிர்க்கட்சியினர் முற்படுகிறார்கள். பழனிசாமி ஆட்சிக் காலத்தில் பாலும், தேனும் ஆறாக ஓடியதா? அவர் தலைவர் என்று போற்றக் கூடியவரின் (ஜெயலலிதா) கொடநாடு பங்களாவில் காவலரின் உயிரைகூட காப்பாற்ற முடியாத துப்புகெட்ட ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. சட்டம் - ஒழுங்கை பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை’’ என அமைச்சர் பி.கே. சேகர் பாபு பதிலடி கூறியுள்ளார்.