புதுதில்லி, ஆக.31- ஜம்மு - காஷ்மீர், ஹரி யானா மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதி களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்தார். அதில், ஜம்மு - காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக் டோபர் 1 என மூன்று கட் டங்களாகவும், ஹரியானா வுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் பேர வைத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக் டோபர் 4-ஆம் தேதி நடை பெறும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹரி யானா சட்டப்பேரவைத் தேர் தல், அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும், ஜம்மு - காஷ்மீர், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக் கும் சேர்த்தே அக்டோபர் 4-ஆம் தேதிக்கு பதில் அக் டோபர் 8-ஆம் தேதி மாற்றப் பட்டுள்ளது.
பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டு கள் பாரம்பரிய திருவிழா வருவதால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஹரி யானாவில் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக இந் திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.