india

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துக!

புதுதில்லி, ஆக. 11- வங்கதேசத்தில் சிறுபான்மை யினர் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திட, வங்கதேச இடைக்கால அரசாங்கமும், இந்திய ஒன்றிய அரசாங்கமும் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:

ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்த தைத் தொடர்ந்து வங்க தேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் இந்து  கோவில்கள் மீதும் பல தாக்குதல் கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி யாகி வருகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை யைப் பயன்படுத்திக்கொண்டு  மத அடிப்படைவாத சக்திகள் சிறு பான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது.

வங்க தேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசாங்கம் சிறு பான்மையினரின் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்திட உறுதியான நட வடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். ஒன்றிய அரசாங்கமும் வங்க தேசத்தில் இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக் குழு கூறியுள்ளது.

(ந.நி.)