புதுதில்லி, ஜூலை 27- ஆளுநர்கள், பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட அரசமைப்பு சாச னத்துக்கு புறம்பான பதவிகள் வகிப்பதை தடை செய்ய வேண்டும் என்று கூறி, மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் கொண்டு வந்த தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்யவே விடாமல் பாஜக தடுத்தது.
அரசமைப்பின் 158-ஆவது பிரிவில் திருத்தம் கோரும் மசோதாவை வாக்களிப்புக்கு விட்டு நிராகரித்தது. இதுவரை இல்லாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அறிமுகக் கட்டத்தில் தனிநபர் மசோதாக்கள் பொதுவாக அரசாங்கத் தால் எதிர்க்கப்படுவதில்லை. அவை யை நடத்திய துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் முதலில் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். இதற்கு எதிராக பாஜகவினர் அமளி யில் ஈடுபட்டனர். பாஜகவின் கன்ஷ்யாம் திவாரி மசோதாவை வாக்களிப்புக்கு விடக் கோரினார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாக்கெடுப் பில் உடன்படவில்லை.
மாநிலங்களவைத் தலைவர் பிடிவாதம்
ஆனால், அவை முன்னவரான வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மசோதா தாக்கல் செய்வதை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப் பாட்டை எடுத்தார். அதற்கேற்ப மசோதா வை தாக்கல் செய்யவே அனுமதிக்க லாமா..? என்று குரல் வாக்கெடுப்பு கோரிய மாநிலங்களவைத் தலைவர், மசோதாவை எதிர்ப்பவர்களே பெரும்பான்மை என்ற வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தார்.
இதுகுறித்து ஆர்ஜேடி-யின் மனோஜ் ஜா பேசுகையில், பலரின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் திருத்தத்தை முன்மொழிந்து பாஜக எம்.பி. சர்ச்சைக்குரிய ஒரு மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு மாநிலங்க ளவைத் தலைவர் முன்பு அனுமதி அளித்ததை நினைவு கூர்ந்தார்.
வாக்கெடுப்பில் தோல்வி
பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநர்கள் வகிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை என்பதை பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார்.
எனினும், மாநிலங்களவைத் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றாததால், ஜான் பிரிட்டாஸ் வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் 56 பேர் எதிர்த்தனர். 21 பேர் மசோதா அறிமுகத்திற்கு ஆதரவாக வாக்க ளித்தனர். வழக்கமான பாஜகவுக்கு ஆத ரவாக செயல்படும் நவீன் பட்நாயக் கின் பிஜேடி, இந்த முறை பிரிட்டாஸின் மசோதாவை ஆதரித்தது.
புதிய மசோதாவை தாக்கல் செய்த பிரிட்டாஸ்
இதையடுத்து, மாநில சட்ட மன்றங்கள் நிறைவேற்றும் சட்டங் களை சிறுமைப்படுத்தும் யுஜிசி சட்டங்களும் விதிகளும் திருத்தப்பட வேண்டும் என்ற மற்றொரு மசோதா வை ஜான் பிரிட்டாஸ் தாக்கல் செய்தார். ஆளுநர்கள் அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பான பதவி வகிப்பதை தடுக்கும் தனிநபர் மசோதா வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்த மசோதா வை அவர் தாக்கல் செய்தார்.
மாநிலங்களின் சட்டத்திற்கு மேலானதல்ல யுஜிசி சட்டம்!
இது யுஜிசிவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மேலாக மாநில சட்டமன்றங்களால் நிறை வேற்றப்பட்ட சட்டங்களை பரிசீலிக்க உதவுகிறது. ஆளுநர்கள் அரசிய லமைப்பிற்கு அப்பாற்பட்ட பதவிகளை ஏற்பதைத் தடுக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைக்கிறது என்றார். யுஜிசியின் ஏதேனும் விதி அல்லது விதிகள் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களில் தலையிடு மானால், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமே மேலோங்கும்! என்று பிரிட்டாஸ் தாக்கல் செய்த யுஜிசி திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
‘வாக்கெடுப்பு மூலம் நிராகரித்த அரசமைப்புசட்ட திருத்த மசோதா வுக்கு இணையானதுதான் இந்த மசோதா’ என இதனைத் தாக்கல் செய்த பிறகு ஜான்பிரிட்டாஸ் தெரிவித்தார்.