india

img

ஆளுநர் ரவியை நீக்கவேண்டும்:சிபிஎம் வலியுறுத்தல்!

ஆளுநர் ரவியை நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியிருக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இது, மாநில முதல்வரின் அறிவுரையைத் தவிர ஓர் அமைச்சரை நியமனம் செய்வதற்கோ அல்லது நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதால், இச்செயல் அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும்.

ஆளுநர் ரவி, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதன் மூலம் மாநில அரசியலிலும், மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளிலும் தொடர்ந்து தலையிட்டுக்கொண்டிருக்கிறார். இதில் இப்போது மிகவும் ஒழுக்கக்கேடான முறையில் ஓர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்திருப்பது, (அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதிலும்கூட), இவர் அரசமைப்புச்சட்டத்தின் பதவியான ஆளுநர் பொறுப்பில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.