புதுதில்லி, ஜன. 30 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், புதனன்று துவங்குகிறது. 2024- ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், துவக்க நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை யாற்றுகிறார்.
நாளை இடைக்கால நிதிநிலை அறிக்கை!
அதைத்தொடர்ந்து வியாழன் (பிப்ரவரி 1) அன்று, 2024-25 நிதி யாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப் படுகிறது.
அந்த வகையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது இடைக்கால பட்ஜெட் டையே தாக்கல் செய்ய உள்ளார். 18-ஆவது மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பின், வரக்கூடிய புதிய அரசு, 2024-25 நிதியாண்டிற்கான விரி வான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும். அந்த வகையில், நரேந்திர மோடி தலை மையிலான 2-ஆவது அரசின் இறுதி பட்ஜெட் இதுவாகும்.
புதிய அறிவிப்புகள் இருக்காது
பொதுவாக, இடைக்கால நிதி நிலை அறிக்கையில், பெரிய அள விற்கான கொள்கை முடிவுகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது, என்பதால், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், முக்கியத் திட்டங்கள் எதுவும் இருக்காது.
வருவாய்- செலவு, நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகி யவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் இடம்பெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9 வரை நடைபெற உள்ளது.
இதனிடையே, விலைவாசி உயர்வு, வேலையின்மை, நாடாளு மன்றப் பாதுகாப்பு, ஒரே நாடு; ஒரே தேர்தல், சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 146 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னதாக, கடந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 146 எம்.பி.க்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் செவ்வாயன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் திற்குப் பிறகு பிரகலாத் ஜோஷி இது தொடர்பான அறிவிப்பை வெளி யிட்டார். “அனைத்தும் (இடை நீக்கங் களும்) ரத்து செய்யப்படும். நான் (மக்களவை) சபாநாயகர் மற்றும் (மாநி லங்களவைத்) தலைவருடன் பேசி யுள்ளேன், அரசாங்கத்தின் சார்பாக வும் நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இது சபாநாயகர் மற்றும் தலைவரின் அதிகார வரம்பு. எனவே, சம்மந்தப்பட்ட சிறப்புக் குழுக்களுடன் பேசி, இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும் என, இரு வரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும், ஒப்புக்கொண்டனர்’’ என ஜோஷி கூறினார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் புதனன்று அவைக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 13 அன்று, நாடாளு மன்ற மக்களவைக்குள் வண்ணப் புகைக்குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, அவை யில் விவாதம் நடத்த வேண்டும்; உள்துறை அமைச்சர் அமித்ஷாவிளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதற்காக, வரலாற் றில் இதுவரை இல்லாத அராஜகமாக, மக்களவையில் இருந்து 100 பேர் மற்றும் மாநிலங்களவையில் 46 பேர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக நாடாளு மன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, இக்கூட்டத்தின்போது, “இஸ்லாமியர் களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்தக்கூடாது என்று வலி யுறுத்தினோம். இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாதிவாரி கணக் கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கோரினோம். 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப் பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படாமல் உள்ளது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றோம்” என தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாடாளு மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றும் குறிப் பிட்டார்.