மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகை யில்,”அரசுக்கு அரசியல் அதிகாரம் உள்ளது என்றாலும், எதிர்க்கட்சிகள் இந்திய மக்களின் குரலை பிரதி பலிக்கின்றன. இந்த முறை பெருமளவி லான மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத னால் அவை சிறந்த முறையில் செயல் பட வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். சபாநாயகர் தனது பணியை செய்வதில் எதிர்க்கட்சிகள் உதவிகர மான ஆதரவை அளிக்கும். அதனால் இந்திய மக்களின் குரலை பிரதிபலிக் கும் அவையில் சபாநாயகர் என்பவர் நடுவராகச் செயல்பட வேண்டும். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் காப்பாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு தருவதன் மூலம் அரசிய லமைப்பை காக்கும் கடமையை சபா நாயகர் செய்வார் என நம்புகிறேன். இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்திச் செல்லப்படுகிறது என்பது ஒரு பிரச்சனை அல்ல. இந்த அவையில் இந்திய மக்களின் குரல் ஒலிப்பதற்கு எந்த அளவு அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் இந்த அவையை திறமையாக நடத்தலாம் என்ற கருத்தே ஜனநாயக விரோதம். அரசியல் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பில்தான் மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் . எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் கடமையை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.