india

img

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

புதுதில்லி:
தில்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 81. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஷீலா தீட்சித் தில்லியிலுள்ள போர்ட்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ஷீலா தீட்சித், 1998 ஆம் ஆண்டு முதல்
2013 ஆம் ஆண்டு வரை மூன்று முறை தில்லி முதலமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு கேரள மாநில ஆளுநராகவும் சிறிது காலம் பதவி வகித்தார். தில்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஷீலா தீட்சித் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;