ஏழைகளுக்கு பயன் அளிக்கும் கொள்கைகளுக்காக நின்ற அறிஞர் குரியன்
பினராயி விஜயன் இரங்கல்
பொருளாதார அறிஞர் சி.டி.குரியன் கேரளத்தில் உள்ள கொச்சி அருகே மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில், பேராசிரியர் சி.டி.குரியன் ஒரு சிறந்த அறிஞராக மட்டுமல்லாமல், சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களில் கட்டுரையாளராகவும் இருந்துள்ளார். பெரும்பான்மையான மக்களுக்கு பயனளிக்கும் கொள்கைகளை அவர் தொடர்ந்து ஆதரித்து வந்தார் என்று கூறியுள்ளார். தி இந்து பதிப்பக குழுமத்தின் இயக்குநரும், தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ராம் உள்ளிட்ட பலரும் குரியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தை உறிஞ்சி கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் வரி திட்டம்
2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், வரி செலுத்தும் இந்திய நடுத்தர வர்க்கம் மீது மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
பணவீக்கம், வேலையின்மை, பொரு ளாதார நெருக்கடி, சிறு சேமிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி அதிக செலவு ஆகியவை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வின் ‘பெரும்பான்மை’ வெற்றியை தடுத்து நிறுத்திய முக்கியக் காரணி களாக இருந்தன.
இந்நிலையில் இந்த பட்ஜெட் உரை யில் கூட இந்தப் பிரச்சனைகளை எல்லாம் குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட எந்த பிரிவினரின் துன்ப த்தையும் குறைக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடவில்லை.
நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்து வோருக்கு வருமான வரியில் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்படுகிறது. உண்மை யில் இந்த சலுகை அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினர் புதிய முதலீடுகள் செய்யும் போது, அதில் விதிக்கப்படும் அதிக வரி களால் உறிஞ்சப்பட்டு வரும் நடுத்தர வர்க்கத்தினர் எந்த பலனையும் அடைய முடியாது.
அதே வேளையில் வெளிநாட்டு முத லீடுகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக் கான கார்ப்பரேட் வரி தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கம் முன்னெடுக்கும் சிறு குறு நிறுவனங்களை முடக்கி விட்டு பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மட்டும் வளர் வதற்கான பாதையை உருவாக்கிவிடும். இதன் மூலம் மோடி அரசு தனது தோல்வி யில் இருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல் முன்பு போலவே தனது மோசமான கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கையை பின்தொடர்ந்து, பெரும் கோடீஸ்வரர்களுக்கு சாமானியர்களை தண்டித்துள்ளது.
500 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங் களில் பயிற்சியாளர்களாக இளைஞர் கள் சேரலாம் என்ற அறிவிப்பு இளை ஞர்களின் உழைப்பை மலிவான முறை யில் உறிஞ்சி கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபத்தை ஈட்ட வழிவகுப்ப துடன் குறைந்த காலத்திலேயே அவர் களை வெளியே தூக்கி எறிந்து விடவும் வழி செய்கிறது.
இது எந்த நிலையிலும் சமத்துவ மின்மையை சரி செய்யாது. மாறாக இந்திய சமூகத்தில் சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும்.
தி வயர் இணைய இதழில்
அஜய் ஆசிர்வாத் மஹாபிரஸ்தா எழுதியுள்ள விமர்சனத்தில் இருந்து