india

img

கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு

மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக கடந்த மார்ச் 21  அன்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26 அன்று சிபிஐ கைது செய்தது. அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலை யில், சிபிஐ கைது வழக்கு நிலுவையில் இருப்பதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை யில் உள்ளார்.

இந்நிலையில், சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த  வழக்கு வியாழனன்று விசார ணைக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 20 வரை கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.