india

img

மத்திய பட்ஜெட் 2019-2020 நாடாளுமன்றத்தில் தாக்கல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக , நிதி அமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை முதலில்  விளக்கினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயலால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து  மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.
பதவியேற்ற பின்ற 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். அதன் பணிகள் முடிவடைந்து இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்தார். முன்னதாக  நிதி அமைச்சக அதிகாரிகளுடன்  சென்ற நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடம் பட்ஜெட்டை  சமர்ப்பித்து விளக்கினார். 
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.


அனைவருக்கும் வீடு கழிப்பறை

 

  • தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்துள்ளது. இந்தியாவை புதிய இந்தியாவாக உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு கழிப்பறை வழங்க அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் விரிவுபடுத்தப்படும்
  • 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சட் கோடி ரூபாய் முதலீடு செய்ய நடவடிக்கை
  • ஒரு நாடு ஒரே மின்சாரம் திட்டம் கொண்டு வரப்படும் 
  • ஆண்டுக்கு 1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
     

அன்னிய முதலீடு

  • காப்பீட்டுத் துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் 
  • சில்லறை மற்றும் வணிகம் விமானத்துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்
  • ஊடகம் விமானத்துறைகளில் அன்னிய முதலீடுகளை அனுமதி குறித்து ஆலோசனை நடத்த முடிவெடுக்கப்படும்.
  • மேலும் 300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
  • இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய சக்தியாக உருவாகி உள்ளது.
  • மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்
  • மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்

எரிவாயு இணைப்பு

 

  • 2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் எஸ்பிஜி எரிவாயு இணைப்பு பெற்றிருக்கும்
  • 5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • நாடுமுழுவம் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
  • நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்
  •  

குடிநீர்

 

  • குடிநீர் பிரச்சனை இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து இந்தியர்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ஹர்கர் ஜல் (ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்) திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நீர் மேலாண்மையை சரி செய்ய நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல இயக்கங்கள் நடத்தப்படும்.

 
விவசாயத்தில் தனியார் முதலீடு

 

  • உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணமான விவசாயிகளுக்கு நன்றி
  • விவசாய துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
  • விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள் விவசாயத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. 
  • எண்ணெய் வித்துகள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
  • 2024 ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும்.

இந்தியாவின் கல்வித்தரம்

 

  • இந்தியாவின் கல்வித்தரம் கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
  • உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.
  • சர்வதேச அளவில் இந்திய மாணவர்கள் போட்டியிடத் தயாராகும் வரை உயர் கல்வித்துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.
  • உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.
  • விளையாட்டு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் 
  • சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  • புதிதாக உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
  • கழிவுநீர் சாக்கடைகளை கழிவுகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும். 
  • இந்தியா விரைவில் உயர்கல்வி மையமாக மாறும்.
  • வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவில் படியுங்கள் திட்டம் முன்னெடுக்கப்படும்
  • சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் 
  • 35 கோடி எல்இடி பல்புகளை வழங்கியதால் ரூ18341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
  • எல்இடி மூலமாக ஆண்டுக்கு ரூ.341 கோடி அளவுக்கு மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
  • இந்திய பாஸ்போட் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும். 
  • நாடுமுழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அந்த வகையில் உலக தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • வங்கிகளில் வாராக்கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 13.8 சதவீதம் வளர்ந்துள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும்
  • பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
  • புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பிரத்யேக திட்டம் அடுத்த ஆண்டு துவக்கி வைக்கப்படும்
  • பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவிகிதம் ஆக நீடிக்கும்.
  • பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விற்பனை மூலம் ரூ1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
  • இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்திற்குள் உள்ளது.
  • ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை செய்வதில் இருக்கும் சிக்கல்களை களைய முன்னுரிமை
  • 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
  • 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • மின்சார வாகனங்கள் வாங்கினால் ரூ 1. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு  அளிக்கப்படும்.
  • கடனில் வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கான வட்டியில் ரூ 1.5 லட்சம்வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

நேரடி வரிவருவாய் உயர்வு

  • நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்
  • நாட்டில் உள்ள 99.3 சதவிகித நிறுவனங்கள் 25 சதவிகித வரி வரம்புக்குள் வருகின்றன.
  • 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது  5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் 6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோரக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்புமுறைகள் தளர்த்தப்படுகின்றன என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
  • பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். 
  • குறைந்த விலையில் வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ. 1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.
  • 15ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும்.
  • ஆண்டுக்கு ரூ1 கோடிக்கு மேல் பணமாக வங்கிகளில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவிகிதமாக இருக்கும்.
  • ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
  • பெட்ரோல் டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும்
  • தங்கம் இறக்குமதி மீதான வரி10 லிருந்து 12 சதவிகிதமாக உயர்வு
  • மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
;