india

img

காங்கிரஸ்... ஆம் ஆத்மி... ஜேஜேபி... வினேஷ் போகத்

வடமாநிலங்களில் ஒன்றான  ஹரியானாவில் அக்டோ பர் 1 அன்று சட்டமன்ற தேர்  தல் நடைபெறும் என இந்தியத் தேர்  தல் ஆணையம் சமீபத்தில் அறி வித்தது. மக்களவை தேர்தலில் எதி ரொலித்த பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலை சட்டமன்ற தேர்த லில் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலை போலவே  காங்கிரஸ் கட்சி கணிசமான வாக்கு களை பெற்று ஆட்சியை கைப்பற்  றும் என தற்பொழுதே கருத்துக் கணிப்பு முடிவுகளில் தகவல் வெளி யாகியுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒருபக்கம் பாஜகவிற்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ள நிலை யில், மறுபக்கம் பாஜகவுடன் கூட்  டணி அமைக்க பிராந்திய கட்சிகள்  அஞ்சி வருகின்றன. கடந்த 2019 சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த  துஷ்யந்த் சவுதலாவின் ஜேஜேபி  கட்சி கூட்டணியை முறித்து, தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்  ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா லோகித் கட்சி மட்டுமே பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது. ஹரியானா லோகித் கட்சிக்கு மாநி லத்தில் பெரியளவில் வாக்கு வாங்கி இல்லை என்பதால் அந்த கட்சியை கைக்குள் வைத்து ஒன் றும் செய்ய முடியாது என்பது பாஜகவிற்கே தெரியும். 

இதனால் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தங்களுக்கு தோல்வி உறுதி என பாஜக முன்  கூட்டி அறிந்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க பாஜக கூப்பாடு போட்டு வரு கிறது. சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய தேர்தல்  ஆணையத்திற்கு பாஜக எழுதிய  கடிதத்தில்,”தேர்தல் நடைபெறும் காலகட்டமான அக்டோபர் 1 முதல்  அக்டோபர் 3 வரை தொடர் விடு முறை காலங்கள் ஆகும். அதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்  கூடும். ஆகையால் தேர்தல் தேதி யை மாற்ற வேண்டும்” கூறப்பட் டுள்ளது.  பாஜகவின் மறைமுக கூட்டாளியான இந்திய லோக் தளம் கட்சியும் சட்டமன்ற தேர்தலை  தள்ளிவைக்க கோரிக்கை விடுத் துள்ளது.

இதுதான் காரணம்

ஹரியானாவில் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட ஜேஜேபி, ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறி வித்தாலும், தேர்தல் முடிவுக்கு பின்  னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி  அமைக்க ஆதரவு தேவைப்பட் டால், கூட்டணி அமைக்க ஜேஜேபி,  ஆம் ஆத்மி கட்சிகள் தயாராக உள்ளன. இது பாஜகவிற்கு பலத்த  சேதாரத்தை ஏற்படுத்தும்.

மேலும் தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான துஷ்யந்த் சவுதலா ஜேஜேபி கட்சியை உடைத்து அரசியல் ஆதாயம் பெறு வதற்காக சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து ஜேஜேபி கட்சியை உடைக்க பாஜக படாதபாடுப் பட்டு வருகிறது. மே மாதத்தில்  ஜேஜேபி கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தங்களிடம் இருக்கின்றனர் என  “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம்  பாஜக ஒரு புரளியை கிளப்பி விட்டது. ஆனால் அந்த 5 ஜேஜேபி  எம்எல்ஏக்கள் யாரென்று இதுவரை  தெரியவில்லை. ஜேஜேபி கட்சி யை உடைத்தால் மட்டுமே போது மான இடங்களை கைப்பற்ற முடி யும் என்ற எண்ணத்தில் அக்கட்சி யை உடைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

மிரட்டும் வினேஷ் போகத்

இதுதவிர, அரசியல் சதியால்  பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை  இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்றவருக்கு இணையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார். வினேஷ் போகத்திற்கு நேரடியாக ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்க முன்வந்துள்ளது. ஒரு வேளை வினேஷ் போகத் காங்கி ரஸ் கட்சியில் இணைந்து  சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு பத்ரா தொகுதி ஒதுக் கப்படலாம். இதனால் பத்ரா தொகு தியைச் சுற்றியுள்ள 6 தொகுதி களில் பாஜக கண்டிப்பாக படு தோல்வி அடைய வாய்ப்புள்ளது. பாஜக சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்க கூறுவதற்கு வினேஷ் போகத்தும் ஒரு முக்கிய காரண மாக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

காரணம் சரியாக இருக்க வேண்டாமா?

90 தொகுதிகளை கொண்ட ஹரி யானாவில் ஒரே கட்டமாக அக்டோ பர் 1 அன்று வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அக்டோபர் 4 அன்று  வாக்கு எண்ணிக்கை நடைபெற வுள்ள நிலையில், அக்டோபர் 1  முதல் அக்டோபர் 4 வரை தொடர்  விடுமுறை காலம் என தேர்தலை  ஒத்திவைக்க பாஜக கூறும் கார ணம் நகைப்பை ஏற்படுத்தியுள் ளது. ஒரே கட்டமாக அக்டோபர் 1 அன்றே வாக்குப்பதிவு நடை பெறவுள்ள நிலையில், தொடர் விடு முறை காலம் வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்த  வாய்ப்பில்லை. தோல்வி பயத்தால்  பாஜக சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்க கூப்பாடு போட்டு வரு கிறது.