திருவனந்தபுரம்/திருச்செந்தூர், மே 5- இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கை யும் இன்றி பலத்த காற்றின் விளைவாக ஏற்படும் கடல் சீற்றம், ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என அழைக்கப்படுகிறது. திருட னைப்போல சற்றும் எதிர்பாராத தரு ணத்தில் இது வரும் என்பதால் கேரள மக்கள் இதை, ’கள்ளக்கடல் நிகழ்வு’ என அழைக்கின்றனர்.
இந்த நிகழ்வால், சனிக்கிழமை அதி காலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணி வரை கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி கள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப் புள்ளதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை எச்சரிக்கை விடுத்திருந்தன.
’குறிப்பாக, கன்னியாகுமரி, திரு நெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி களில் கடல் அலையின் சீற்றம் 1.5 மீட்டர் அளவிற்கு உயரும். கடல் கொந்தளிப்பு டன் காணப்படும் என்பதால், மீன வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்ட துடன், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி கேரளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடல் சீற்றம் தீவிரமடைந்தது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, திருச்சூர் மாவட் டங்களில் கடல் சீற்றம் காணப்பட்டது. அஞ்சுதெங் அருகே பூத்துரா என்ற இடத்தில் கடல் சீற்றம் தீவிரமடைந்து, கடல் நீர் சாலை வரை வந்தது. இதில் ஒரு வீடு சேதமடைந்தது. தொடர்ந்து மூன்று வீடுகளில் இருந்தவர்கள் வெளி யேற்றப்பட்டனர். முதலபோஜத்தில் அலையின் தாக்கம் அதிகரித்ததால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தண்ணீரில் மூழ்கின.
ஆலப்புழாவில் தோட்டப்பள்ளி, புறக்காடு, ஆராட்டுபுழா ஆகிய கட லோரப் பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. புறக்காடு, ஆராட்டுபுழா கடலோரப்பகுதி மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாது காப்பான இடத்திற்கு எடுத்துச் சென்ற னர். கொல்லம் மாவட்டம் கொல்லம் கொடுங்கலூரில் கருங்கடல் நிகழ்வு ஏற்பட்டது.
திருச்செந்தூர்
தமிழகத்தில் திருச்செந்தூரில் ஞாயி றன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப் பட்டது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்க ளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதி கரித்துக் காணப்பட்டது. ஆனால், கட லில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கடலில் நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
தேங்காய்ப் பட்டணம் கடற்கரையில் சிறுமி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் தேங் காய்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதி யில் பிரேமதாஸ் என்பவர் அவருடைய மகள் ஆதிஷா (7)வுடன் நின்று கொண்டிருந் துள்ளார். அப்பொழுது திடீரென எழுந்த ராட்சத அலையில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் பிரேமதாஸ் மீட் கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். ஆனால் அவரது மகள் ஆதிஷாவைக் காணவில்லை. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.