புதுதில்லி
ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்க் கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கு தொடர்பாக ஜனவரி 31 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 6 மாதம் சிறை வாசத்திற்கு பிறகு, ஜூன் 28 அன்று ஹேமந்த் சோரனை ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது
இந்நிலையில், ஹேமந்த் சோரனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தர வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அம லாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு திங்க ளன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,”ஜூன் 28 அன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தால் வழங் கப்பட்ட தீர்ப்பு தகுந்த காரணங்களுக் காகவே வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தலை யிட விரும்பவில்லை. எனவே அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
ராஞ்சி
ஜார்க்கண்டில் நிதிஷ் கட்சி தனித்துப் போட்டிபதற்றத்தில் பாஜக
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள் ளது. ஜார்க்கண்டில் ஜேடியு கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது என்றாலும், பீகார் எல்லைப்பகுதியில் அக்கட்சிக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. ஜேடியு-வின் இந்த உதிரி ஆதரவை வைத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக கணக்குப் போட்டது. ஆனால் ஜேடியு, பாஜகவின் கூட்டணி கணக்கை புறக்கணித்து 11 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பீகார் எல்லைப்பகுதியில் உள்ள சட்ட மன்ற தொகுதியில் ஜேடியு தனித்து களம் கண்டால் பாஜகவிற்கு வரவேண்டிய வாக்குகள் பிரியும். இவ்வாறு வாக்குகள் பிரிவது ஆளும் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணிக்கு சாதகமாக அமை யும் என்பதால், ஜேடியு-வின் இந்த அறிவிப்பு பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்க அஞ்சும் பாஜக
ஜேடியு-வின் தயவிலேயே மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள் ளார். அதனால் ஜார்க்கண்டில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக ஜேடியு-வை விமர்சிக்க பாஜக தயங்குகிறது. விமர்சித்தால் மோடியின் பிரதமர் நாற்காலி ஆட்டம் கண்டுவிடும் என்பதால், உள்ளே அழுது கொண்டே வெளியே சிரிக்கத்தான் முடிகிறது என்கிற விரக்தியைத்தான் ஜார்க்கண்ட் பாஜக தலைவர்கள் வெளிப்படுத்து கின்றனர் என இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுதில்லி
கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை போல சிபிஐ-யும் தனியாக வழக்குப் பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலை யில், சிபிஐ கைது காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.
இந்நிலையில், மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக சிபிஐ தனது விசார ணைகளை முடித்த நிலையில், திங்க ளன்று கெஜ்ரிவால் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் மீது தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள் ளது. மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரி வால் “முதன்மையான குற்றவாளி” என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
400 கோடி ஊழலில் பாஜகவினரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
அகமதாபாத்
குஜராத்தின் மீன்வளத்துறையில் 400 கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கில் தங்களை விடுவிக்குமாறு இரண்டு பாஜக முன்னாள் அமைச்சர்களின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த புருஷோத்தம் சோலங்கி, வேளாண்துறை அமைச்சராக இருந்த திலீப் சங்கானி ஆகிய இருவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி கோருவதில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக இஷாக் மராடியா என்பவர் புகார் அளித்தார். மாநிலம் முழுவதுமுள்ள 58 பெரிய நீர்த்தேக்கங்களில் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியை அப்போதைய ஆளுநர் கம்லா பெனிவால் அளித்தார். அந்த அனுமதியைத் தடுக்க அப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசு பெரும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு பாஜக முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தொடர்ந்து கோரி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பாக இது பற்றிய தீர்ப்பை வழங்கிய குஜராத் உயர்நீதிமன்றம், வழக்கிலிருந்து இருவரையும் விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குண்டுவெடிப்பு 4பேர் பலி
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 40 நாட் களாக தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங் கள் அரங்கேறி வருகின்றன. பார முல்லா மாவட்டத்தின் சோபோர் டவுனில் உள்ள ஷெர் காலனி பகுதியில் இரும்பு ஸ்கிராப்களை ஏற்றி வந்த லாரியில் வைக்கப்பட்டு இருந்த சக்திவாய்ந்த குண்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஷெர் காலனி மக்கள் நட மாட்டம் அதிகமுள்ள பகுதி என்ற நிலை யில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் குண்டு வெடிப்பிற்கான காரணம் தொடர்பாக எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்கிராப்களை ஏற்றி வந்த லாரி லடாக்கில் இருந்து வந்துள்ளதாக மட்டும் சோதனைச் சாவடி மூலம் தகவல் வெளி யாகியுள்ளது. இது தீவிரவாத சதிச் செயலா? இல்லை, வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் ஸ்ரீநகர் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.
புதுதில்லி
பீகார் 65% இடஒதுக்கீடு
பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப் பட்டோர் 30% (ஈபிசி - 18%; ஓபிசி - 12 %), தாழ்த்தப்பட்டோர் 16%; பழங்குடிகள் 1%; பிற்படுத்தப்பட்ட பெண்கள் 3% என மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்த நிலையில், இதனை பிற்படுத்தப்பட்டோர் 43%; தாழ்த்தப்பட்டோர் 20%; பழங்குடிகள் 2% என மொத்தம் 65% ஆக அதிகரித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் பீகார் மாநில சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், பீகார் அரசின் 65% இடஒதுக்கீடு உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக பீகார் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த நிலையில், மேல்முறையீட்டு மனு, திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தர வுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கு விசாரணை யை செப்டம்பருக்கு ஒத்திவைத்தனர்.