india

img

வலுவான நிலையில் “இந்தியா” கூட்டணி பாஜக அரசிற்கு புதிய சட்டங்கள் இயற்றுவது சவாலாக இருக்கும் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு

பிரபல மதிப்பீட்டு நிறுவன மான பிட்ச் ரேட்டிங் நிறுவ னம்,”இந்தியா” கூட்டணி வலு வாக இருப்பதால் கடந்த ஆட்சியை போன்று புதிய சட்டங்கள் இயற்று வது பாஜகவிற்கு அவ்வளவு எளி தாக இருக்காது” என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து பிட்ச் ரேட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்க ளில் பெரிய “சீர்திருத்தங்கள்” மேற்கொள்ள புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி பலவீனமான நிலை யில் இருப்பதால் புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமின்றி நடை முறையில் உள்ள சட்டங்களை திருத்தம் செய்வதும் மோடி அரசிற்கு  பெரும் சவாலாக இருக்கும்” என எச்சரித்துள்ளது. 

கடந்த 16ஆவது (2014 முதல் 2019 வரை) மற்றும் 17ஆவது (2019 முதல் 2024 வரை) மக்களவை ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் குறைவாக இருந்ததால் தனது இஷ்டத்திற்கு வேளாண் சட்டம், சிஏஏ, பொது சிவில் சட்டம், அக்னி பாதை திட்டம் என பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசு இயற்றியது. ஆனால் இம்முறை எதிர்க்கட்சிகளின் “இந்தியா” 232 இடங்களுடன் வலுவாக இருப்பதால்  கடந்த 2 ஆட்சிகளை போல இம் முறை மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு சட்டங்களை அவ்வளவு சாதாரணமாக இயற்ற முடியாது என பிட்ச் ரேட்டிங் நிறு வனம் தனது கணிப்பு அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.