புதுதில்லி, ஜன.29- 15 மாநிலங்களில் காலி யாகவுள்ள 56 மாநிலங்க ளவை உறுப்பினர் பதவி களுக்கு வருகின்ற பிப்ரவரி 27 அன்று தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங் கானா மற்றும் ஒடிசா, ராஜஸ் தான் தலா 3, சத்தீஸ்கர், ஹரி யானா, இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநி லங்களில் தலா 1 என மொத்தம் 56 மாநிலங்களவை உறுப்பி னர்களின் பதவிக்காலம் ஏப் ரல் 2 மற்றும் ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
அதாவது, 13 மாநிலங் களைச் சேர்ந்த 50 மாநிலங்க ளவை உறுப்பினர்களின் பத விக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதி யுடனும், மீதமுள்ள 2 மாநிலங் களைச் சேர்ந்த 6 உறுப்பினர் களின் பதவிக்காலம் ஏப்ரல் 3-ஆம் தேதியுடனும் முடிவடை கின்றன. எனவே, அதற்கு முன்ன தாக இந்த இடங்களுக்கு தேர் தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை யில், பிப்ரவரி 27 அன்று தேர் தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, பிப்ரவரி 8 அன்று வெளியாகும், பிப்ரவரி 15 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்; வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16 வரை நடைபெறும்; விண் ணப்பதாரர்கள் பிப்ரவரி 20-க்குள் தங்கள் வேட்புமனு வைத் திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
பதவி காலியாகும் எம்.பி.க் களின் 9 பேர் தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர் கள் ஆவர். இவர்கள் தவிர முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகி யோரும் பதவி ஓய்வு பெற்ற உள்ளனர்.