ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவு நீக்கப்பட்டடு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன் பிறகு 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில், செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நடைபெறுகிறது. அதேபோல், அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் அக்டோபர் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.