india

img

நாடு முழுவதும் மசூதிகளை அபகரிக்க நடக்கும் சூழ்ச்சி

புதுதில்லி, பிப்.3-  மசூதி, வக்பு சொத்துக்களை அப கரிக்க நடக்கும் முயற்சிகள் குறித்த தங்களின் கவலைகளை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்து முறையிட முஸ்லிம் அமைப்புகள் முடிவு செ;a Jள்ளன.

பாபர் மசூதியைத் தொடர்ந்து, வார ணாசியின் ஞானவாபி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, தில்லியில் சுனேஹ்ரி ஆகிய மசூதிகளையும், தங்க ளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்-பரிவாரங்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றன.

 இதில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டி, அத னைப் பிரதமரே முன்னின்று திறந்து வைத்த பின்னர், தங்களின் கூச்சலை அதிகமாக்கி உள்ளனர்.

இதற்கேற்ப, இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, வாரணாசி ஞான வாபி மசூதியின் தெற்குப் பகுதியி லுள்ள பாதாள அறையில், இந்துக் கட வுள்களின் சிலைகளை நிறுவி வழி பாடு நடத்த வாரணாசி மாவட்ட நீதிபதி  அஜய் கிருஷ்ண விஸ்வேஷா ஜனவரி 31 அன்று பிறப்பித்த உத்தரவு மிகுந்த  வசதியாகப் போனது. 

இரவோடு இரவாக சிலைகளை நிறுவிய உ.பி. பாஜக அரசு

ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு, நீதிமன்ற உத்தரவு வந்த 7 மணிநேரத்திற்குள், இரும்புக் கதவுகளை உடைத்து, இரவோடு இர வாக மசூதிக்குள் சிலைகளை நிறுவி பூஜைகளை நடத்தியது. தற்போது நாள்தோறும் ஐந்துகால பூஜைகள் அங்கு நடைபெறத் துவங்கியுள்ளன.

முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தின்  உத்தரவுக்குத் தடை கோரி, மசூதியை  நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜா மியா மஜ்ஜித் கமிட்டி, உச்சநீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங் களை நாடியது. முதலில் உயர் நீதி மன்றத்தை நாடுமாறு, உச்ச நீதி மன்றம் கூற, உயர் நீதிமன்றமோ மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. 

ஆனால், இவை அனைத்திற்கும் முன்னதாகவே, உ.பி. பாஜக அரசு, முன்கூட்டியே திட்டமிட்டு சிலைகளை நிறுவி, பூஜைகளை தொடங்கி விட் டது. 

இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமையன்று வாரணாசி முழுவதும் கடைகளை அடைத்து, தங்களின் வருத்தத்தைப் பதிவுசெய்தனர். 

கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட வாரணாசி முஸ்லிம்கள்
தற்போது கையறு நிலைக்குத் தள் ளப்பட்டுள்ள அவர்கள், ஞானவாபி மசூதி உள்பட நாட்டின் பல்வேறு பகுதி களிலுள்ள மசூதிகளையும் அபக ரிக்கும் நோக்கத்துடன் நடக்கும் வேலை கள் குறித்த தங்களின் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்  திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை சந்திக்க முடிவு செய்துள்ள னர். இதற்காக குடியரசுத் தலைவரின்  நேரத்தையும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட  முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்  கூறியிருப்பதாவது: 

தொல்லியல் துறை ஒருதலைப்பட்ச அறிக்கை

அதில், “வாரணாசி மாவட்ட நீதிபதி யின் முடிவு, மிகவும் கேள்விக்குரிய தாக உள்ளது. பதவி ஓய்வுபெறும் கடைசி நாளில் இந்த தீர்ப்பை அவர்  வழங்கியுள்ளார். அவர், மசூதியின் பாதாள அறையை பூஜைக்கு ஒப்ப டைக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கி யிருந்தும், உடனடியாக பூஜையை  நடத்தியது, வழக்கு தொடர்ந்தவருக் கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே யான கூட்டை அம்பலப்படுத்துவதாக உள்ளது. அத்துடன், இந்தியத் தொல்லி யல் துறையும் சமூகத்தில் கொந்த ளிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பட்சமான அறிக்கையை தாக் கல் செய்துள்ளது.

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் மவுனம்

பிரச்சனை, பாபர் மசூதி, ஞானவாபி மசூதிக்கு அப்பாலும், மதுராவின் ஷாஹி ஈத்கா, தில்லி சுனேஹ்ரி மஸ்  ஜித் உள்பட நாடு முழுவதும் உள்ள ஏரா ளமான மசூதிகள் மற்றும் வக்பு சொத்துக்களைக் குறிவைத்து நீண்டு கொண்டே செல்கிறது. பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மீதான தேவையற்ற உரிமை கோரல்களின் இந்தப் போக்கு தீவிர கவலைகளை எழுப்புகிறது. 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச்சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து மவுனம் சாதிப்பதும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறோம்
இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், எங்களின் கவலை களைத் தெரிவிக்க இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கால அவகாசம் கோரியுள்ளோம். அவரது மட்டத்தில், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்பு கிறோம். மேலும், முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை இந்திய தலைமை நீதிபதிக்கும், மரியாதைக் குரிய மற்றும் பொருத்தமான முறையில் தெரிவிக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.