ஒன்றிய மோடி அரசை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் தில்லியில் போராட்டம் நடத்த பேரணியாக எல்லையில் குவிந்துள்ளனர். விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்துவதை தடுக்க மோடி அரசு தில்லி எல்லைகளில் சிமெண்ட் சுவர் எழுப்பி போக்குவரத்தை துண்டித்துள்ள நிலையில், தில்லி - நொய்டா எக்ஸ்பிரஸ் வே, ஹரியானா - தில்லி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தில்லிக்குள் நுழைய முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வெளிமாநில போக்குவரத்து இன்றி தில்லி தனித்தீவாக துண்டிக்கப்பட்டுள்ளது.