உலக நாடுகளின் தலைநகரங்கள் மத்தியில் மிகவும் மோசமான காற்றின் தரம் கொண்ட தாக இந்திய தலைநகர் தில்லி உள்ளதாக சுவிட்சர் லாந்தின் “ஐக் யூ ஏர்” என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. உலகின் மிகவும் மாசுற்ற பெருநகரப் பகுதி யாக பீகார் மாநிலம் பெகுசராயும் இடம்பிடித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணன் மனை வியும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜமா தொகுதி எம்எல்ஏவுமான சீதா சோரன் பாஜகவில் இணைந் தார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கி ரஸ் பிரிவுக்கு “கொம்பு ஊதும் மனிதன்” சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத் துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாயன்று உத்தர விட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மூலம் தேசியவாத காங்கிரஸை பாஜக இரண்டாக உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பெங்களூரின் பெல்லந்தூ ரில் உள்ள பிரக்ரியா பள்ளிக்கு எதிரே உள்ள காலி நிலத்தில் ஏராளமான ஜெலட்டின் குச்சி, டெட்ட னேட்டர் மற்றும் சில வெடிபொருட்கள் கண்டெ டுக்கப்பட்டன.
பாஜகவின் தந்திரங்கள் தேர்தல் ஆணை யம் போன்ற நிறுவனங்களை அழிப்ப தால், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் மக்கள வைத் தேர்தலை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடந்த காலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆத ரவு அளித்து வந்த நிலையில், பாஜகவின் மிரட்ட லால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்த நிலையில், கர்நாடகா வில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.7.84 கோடி மதிப்பிலான மதுபானம், ரொக்கப் பணம் ஆகிய வற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுதில்லி
கவிதா மனு வாபஸ்: கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டம்
தெலுங்கானா முன்னாள் முதல் வர் கே.சந்திரசேகர் ராவ் மக ளும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கே.கவிதா தில்லி மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 15 அன்று அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைதை எதிர்த்து கவிதா திங்களன்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தி ருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலை யில், திடீரென செவ்வாயன்று தனது மனு வை திரும்பப் பெற்றார்.
கவிதாவுக்கு நிர்ப்பந்தம்?
பிஆர்எஸ் தலைவர் கவிதா கைதுக்கு பிறகு திங்களன்று, தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோ ரின் பெயர்களை மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இணை சதிகாரர்களாக அமலாக்கத்துறை திடீரென சேர்த்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக் கைக்கு பின்னரே, கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கவிதா வாபஸ் பெற்றார்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமலாக் கத்துறை மிரட்டலால் மனுவை வாபஸ் பெற்றாரா? அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ய ஏது வாக மனுவை வாபஸ் பெற்றாரா? கவிதா வை வைத்து கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
சண்டிகர்
ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜேஜேபி கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் ஹரி யானாவில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. முதல்வராக இருந்த மனோ கர் லால் கட்டார் தனது அமைச்சரவை யை கலைத்து மார்ச் 12 அன்று தனது பத வியை ராஜினாமா செய்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் கட்டார் கழற்றிவிடப்பட்டு, குருஷேத்ரா தொகுதி தற்போதைய எம்பியான நயாப் சிங் சைனியை புதிய முதல்வராக பாஜக நிய மித்தது. ஜேஜேபி கட்சியை உடைத்தும், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும் சைனி பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில், எம்பி பதவியை ராஜி னாமா செய்யாமல் முதல்வர் பதவியை சைனி ஏற்றதால் ஹரியானா பாஜக அரசு சட்டவிரோதமானது எனக் கூறி வழக்கறி ஞர் ஜக்மோகன் சிங் பட்டி சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக பதில ளிக்க கோரி ஒன்றிய பாஜக அரசு, ஹரி யானா பாஜக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் ஹரியானா சட்டமன்ற சபாநாய கர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரு
கன்னடர் - தமிழர் - மலையாளிகள் இடையே மோதலை தூண்ட முயற்சி
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே உண வகத்தில் 2 வாரங்களுக்கு முன்பு குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார். தொடர்ந்து, என்ஐஏ வின் அடுத்தகட்ட விசாரணை நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கன்னடர் - தமிழர் - மலையாளிகளுக்கு இடையே மோதலை தூண்டும் முயற்சியில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக மூத்த பாஜக தலை வரும், ஒன்றிய இணையமைச்சருமான ஷோபா கரந்தலாஜே கூறுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டி லிருந்து வந்தவர்களால்தான் நடைபெற் றது. தில்லியிலிருந்து வருபவர்கள், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனவும், கேர ளாவிலிருந்து வருபவர்கள் கர்நாடக மக் கள் மீது ஆசிட் வீசுகின்றனர்” எனவும் கூறி யுள்ளார்.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ்
தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவல கத்தில் செவ்வாயன்று அக் கட்சியின் செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள வைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப் பட்ட நிலையில், கூட்டத்தின் முடிவில் 5 அம்ச தேர்தல் அறிக்கைக்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, “மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக் கப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க அரசியல் சாசன திருத்த சட்டம் இயற்றப்படும். “இந்தியா” கூட் டணி ஆட்சி அமைத்தவுடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இளை ஞர்களுக்கான தொழில்முனைவோர் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக் கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கும் தேசிய குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும். சமூக, பொரு ளாதார மற்றும் சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படும்” என்பவை உள் ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு காங்கிரஸ் செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.