india

img

வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மதுரையை அறிவித்திடுக!

புதுதில்லி, ஜூலை 1- மதுரையை உலகப் பாரம்பரிய, வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திங்களன்று மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.  அப்போது அவர் பேசியதாவது: மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுரை வெறும் நகரமல்ல; அது தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரீகத்தின் தாயகம்.  உலகில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு இன்றைக்கும் வாழும் நகர மாக மதுரை இருக்கிறது.  சமீபத்தில் மத்திய- மாநில அரசு களின் தொல்லியல் துறை மதுரைக்கு அருகில் கீழடியில் நிகழ்த்திய அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எண்ணற்ற பொருட்களும் தொல்பழம் நாகரீகத்தின் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன.  அதில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் இந்த நாகரீகத்தின் சான்றை இன்றைக்கும் உலகின் முன்பு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.  உலகில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கிற ஒரே உலக நகரமாக மதுரை இருக் கிறது.  இந்த நகரம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனித குல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவ மான பங்களிப்பையும் செலுத்திய தாகும்.  எனவே மதுரையை உலகப் பாரம்பரிய நகரமாக, வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;