india

தேர்தல் பத்திர ஊழலில் பாஜகவைக் காப்பாற்ற முயற்சிப்பதா?

புதுதில்லி, மார்ச் 7- உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் குறித்த காலத்திற்குள் தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பான தகவல்களை வழங்  காத ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’  (SBI) மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, ஜனநாயக சீர்திருத்தங்களுக் கான சங்கம் (ADR), காமன் கேஸ் ஆகி யவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளன.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், வியாழ னன்று நேரில் ஆஜரான மூத்த வழக்க றிஞர் பிரசாந்த் பூஷண், தங்களின் இந்த  நீதிமன்ற அவமதிப்பு மனுவை அவசர மனுவாக கருதி விசாரணைக்கு எடுத் துக் கொள்ள வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதம் என்று கடந்த பிப்ரவரி 15  அன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

4 சட்டத் திருத்தங்களும் ரத்து
“அநாமதேய தேர்தல் பத்திரங்கள்  திட்டமானது, அரசியலமைப்பின் பிரிவு  19(1)(a)-இன் படி குடிமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை மீறுவ தாக உள்ளது என்பதால், தேர்தல் பத்தி ரங்கள் திட்டத்தை ரத்து செய்கிறோம்.  மேலும், அநாமதேய தேர்தல் பத்திரங்  கள் திட்டத்திற்காக, நிறுவனங்கள் சட் டத்தின் 182(1)-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், சுதந்திரமான மற்றும் நியா யமான தேர்தல் கொள்கைகளை மீறுவ தாக உள்ளது, நிறுவனங்கள் சட்டத்தின்  பிரிவு 183(3), வருமான வரிச் சட்டத் தின் பிரிவு 13A(b) ஆகியவற்றில் மேற்  கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல்  கட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதித்து வச் சட்டத்தின் பிரிவு 29C-ஐ மீறுவதாக வும் உள்ளது; எனவே, இந்த நான்கு  சட்டத்திருத்தங்களும் ரத்து செய்யப் படுகின்றன” என்று தீர்ப்பில் குறிப்பிட்டி ருந்தது.

மேலும், தேர்தல் பத்திரம் (Electoral  Bonds) விநியோகிப்பதை ஸ்டேட்  பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி உடனே  நிறுத்த வேண்டும். 2019 ஏப்ரல் 12  அன்று உச்சநீதிமன்றத்தின் இடைக்  கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப்  பட்ட அனைத்துப் பத்திரங்களின் விவ ரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணை யதளத்தில் மார்ச் 13-க்குள் பதி வேற்றம் செய்யப்பட வேண்டும்; பண மாக மாற்றப்படாத தேர்தல் பத்திரங்கள்  உடனடியாக உரிய நிறுவனங்களிடமே திருப்பி அளிக்கப்பட வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இழுத்தடிக்கும் ஸ்டேட் வங்கி

ஆனால், 20 நாட்களாக வெறுமனே  இருந்துவிட்டு, தனக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்கு ஒருநாள் முன் பாக, மார்ச் 4 அன்று ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ உச்சநீதிமன்றத்தில் திடீ ரென ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.  அதில், டிகோடிங் மற்றும் தொகுத்தல் ஆகியவற்றில் சிக்கல்கள் உள்ளதால்,  தேர்தல் பத்திரங்களின் விற்பனை தரவு களை வழங்க ஜூன் 30 வரை அவ காசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே உத்தரவிட்டும், தரவுகளை  வழங்க எஸ்பிஐ வங்கி மறுக்கிறது என்  றால், தேர்தல் பத்திரங்கள் மூலமான பாஜகவின் பல ஆயிரம் கோடி ரூபாய்  ஊழலை மூடிமறைப்பதற்கு பொதுத் துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப்  இந்தியா’ துணைபோகிறது என்பது தான் பொருள் என்று பிரதான அரசியல்  கட்சிகள் குற்றம் சாட்டின.

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் மிரட்டலுக்கு அஞ்சா மல், எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவ ரங்களை வெளியிட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழு வதும் எஸ்பிஐ வங்கி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.

இதன் அடுத்தகட்டமாகவே தற் போது எஸ்பிஐ வங்கி மீது உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளது. தேர்தல் பத்தி ரங்கள் முறைக்கு எதிராக முதன்முத லில் வழக்கு தொடுத்த ஒரே அரசியல் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். உச்சநீதிமன்றத் தீர்ப்பை,  எஸ்பிஐ வங்கி மதிக்காத நிலையில், தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் மனுவுடன் -  அதற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு  மனுவையும் பட்டியலிட வேண்டும்; அவ சர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வியா ழனன்று கோரிக்கை விடுத்தார்.  இதனைக் கேட்டுக் கொண்ட தலைமை  நீதிபதி டி.ஒய். சந்திரசூட், விண்ணப்ப எண்ணின் விவரங்களுடன் மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்புமாறு பூஷணி டம் தெரிவித்தார்.