மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), வயநாடு (கேரளா) ஆகிய இரண்டு தொகுதி களில் வெற்றி பெற்ற நிலையில், ரேபரேலி தொகு தியில் மட்டுமே எம்.பி.யாக தொடரவுள்ளதாக திங்க ளன்று ராகுல் காந்தி அறிவித்தார். இந்நிலையில், கலியானதாக அறிவிக்கப்பட உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.'
தில்லியைப் போல மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தீவிர குடிநீர் பஞ்சம் தலைதூக்கி யுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து, தண்ணீர் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
தில்லி விமான நிலையத்தில் வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படு வதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாம தம் ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக ஓடு பாதை கட்டுக்கடங்காமல் சூடானதால் விமா னத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக இண்டிகோ விளக்கமளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் தடை களை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் சந்திரபாபுநாயுடு திறந்து வைத்தார்.
“மின்னணு வாக்கு இயந்திரங்களின் பயன் பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கஞ்சன்ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அம்மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வ்னி வைஷ்ணவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப் பட்டுள்ளார்.
மேற்குவங்க ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. பலத்த காயம் அடைந்த வர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண மாக வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்ச கம் அறிவித்துள்ளது.
புதுதில்லி
ரியாசி வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைப்பு
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட் டத்தில் கடந்த ஜூன் 9 அன்று ஓடும் பேருந்தின் மீது தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தியதால், பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரி ழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஞாயிறன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரியாசி விபத்து மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பாது காப்பு நிலைமை, அமர்நாத் யாத்திரைக் கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். ஆய்வுக்கு பின் ரியாசி விபத்து தொடர்பான விசாரணை திங்க ளன்று தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறி வித்துள்ளது.
புதுதில்லி
பணிக்கு தாமதமாக வந்தால் ஒழுங்கு நடவடிக்கை
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை
ஒன்றிய அரசு ஊழியர்கள் அலுவல கத்திற்கு பணிக்கு வரும் போது பயோமெட்ரிக் ஆதார் அடிப்ப டையிலான வருகை பதிவு முறையை கடைப்பிடிக்காமல் மிகவும் தாமத மாக வருவதாக ஒன்றிய பணியாளர் நலத் துறைக்கு புகார்கள் குவிந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியது.
இந்நிலையில், பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நட வடிக்கை எடுக்குமாறு அனைத்து துறை களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள் ளது. இதுதொடர்பாக ரயில்வே உள் ளிட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒன்றிய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களும் தங்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் முறையாக பதிவு செய்கிறார் களா என்பதை அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் கவனமாக கண்கா ணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புதுதில்லி
அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு
மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தின் பொழுது பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் 400 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிப்போம் என்று கூறினர். தொடர்ந்து பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் 400 தொகுதிகளை வென்றால் “நாட்டின் அர சியலமைப்பு சட்டம் மாற்றப்படும்” என கொக்கரித்தனர். இதற்கு இந்தியா கூட் டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த னர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தால் இந்திய அரசியலமைப்பு சட் டத்தையே பாஜக மாற்றும். அதனால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப் போம்” என்று கூறி கையடக்க அரசியல மைப்புச் சட்டப் புத்தகத்துடன் பிரச்சா ரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது, 400 தொகுதி களை கைப்பற்றுவோம் என்று கூறிய பாஜகவோ தேர்தல் முடிவுக்கு பின் வெறும் 240 இடங்களை மட்டுமே கைப் பற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவோடு மோடி 3ஆவது முறையாக பிரதமர் இருக் கையில் அமர்ந்தார். மோடி மீண்டும் பிரத மராக பதவியேற்றவுடன் அரசியல மைப்பு சட்ட புத்தகத்தை தொட்டு வணங் கிய நிகழ்வும் நிகழ்ந்தது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்து கையடக்க அளவிலான அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள் ளது. கடந்த ஆண்டு 4 ஆயிரம் பிரதிகள் வரை மட்டுமே விற்பனையான இந்த கையடக்க அரசியலமைப்புச் சட்டப் புத்த கம், கடந்த பிப்ரவரி முதல் மே வரை மட்டுமே 5,000 பிரதிகளை தாண்டி விற்ப னையாகியுள்ளது. இளம் வழக்கறி ஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் அரசி யலமைப்புச் சட்டத்தை அறிந்து கொள்வ தற்காக ஆர்வம் பெருகியிருப்பதை இது காட்டுவதாக பதிப்பகத்தார் வியப்புடன் கூறி வருகின்றனர்.