india

img

பெ.சண்முகத்துக்கு அம்பேத்கர் விருது

சென்னை, ஜன. 13 - தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள், தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை சனிக்கிழமை (ஜன.13) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், 32 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணி வகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருபவருமான பெ. சண்முகத்துக்கு டாக்டர் அம் பேத்கர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

விருதுடன் விருதுத் தொகை ரூ. 5 லட்சம்,  தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை யும் வழங்கிய முதல்வர், பெ. சண்முகத்திற்கு பொன்னாடை அணிவித்தும் சிறப்பித்தார். இதேபோல், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதை” பேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு வழங்கிய முதல்வர், விருது தொகையாக ரூ. 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்  பதக்கம், தகுதியுரை வழங்கினார். தொடர்ந்து, திருவள்ளுவர் விருது - பாலமுருகனடிமை சுவாமி, பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம், பெருந்தலைவர் காம ராஜர் விருது - உ. பலராமன், மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பழனி பாரதி, பாவேந்தர் பாரதி தாசன் விருது - கவிஞர் ம. முத்தரசு, தமிழ்த்தென்றல்  திரு.வி.க. விருது -பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் விருது - முனைவர் இரா. கருணாநிதி ஆகி யோருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்றவர் களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோ லை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டது.

விருதுத் தொகை ரூ.5லட்சத்தை நன்கொடை அளித்த பெ.சண்முகம்!
சிபிஎம் - மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு தலா 2.5 லட்சம்

தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான- டாக்டர் அம்பேத்கர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்ட பெ. சண்முகம், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, “பட்டியல் சாதி, பழங்குடியின மக்களிடம் பணியாற்றுவோருக்கு மேலும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இந்த விருது அமைந்துள்ளது; விருதை வழங்கிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியதுடன், “வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைக்க அடிப்படையாக இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும்தான். எனவே, விருதுத் தொகை ரூ. 5 லட்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2.50 லட்சம் ரூபாய், மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு 2.50 லட்சம் ரூபாயும் வழங்குகிறேன்” என்று அறிவித்தார்.