india

img

62% சைனிக் பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தாரைவார்ப்பு!

கடந்த 2022-2023 இடையிலான காலகட்டத்தில் 62% புதிய சைனிக் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பை, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கும், பா.ஜ.க தலைவர்களுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு தாரைவார்த்துள்ளதாக ‘தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கீழ் 33 சைனிக் பள்ளிகள் (ராணுவப் பள்ளிக்கள்) இயங்கி வந்தன. கடந்த 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது, நாடு முழுவதும் 100 புதிய ராணுவப் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. அதே ஆண்டு சைனிக் பள்ளிகளைத் தொடங்க தனியாருக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. 
இந்த நிலையில், கடந்த 2022-2023 இடையிலான காலகட்டத்தில் 40 சைனிக் பள்ளிகள் அதாவது 62% புதிய சைனிக் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பை, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கும், பா.ஜ.க தலைவர்களுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு தாரைவார்த்துள்ளதாக 'தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.