மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவஸ்தவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து, பிரவீண் குமார் ஸ்ரீவஸ்தவா, பொறுப்பு ஆணையராக பதவிவகித்து வந்தார். இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.