பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மனு பாக்கர் ஆவார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் கிடைத்துள்ளது.