india

img

இருட்டில் கருப்புச் சட்டைத் தேடல்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி யில் தேயிலைக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த 2002-2007-ஆம் ஆண்டுகளில் இந்தி யாவில் தேயிலையின் தேவை  குறைந்தது. இதற்குக் காரணம் இந்தியச் சந்தையில் பிற நாடுகளின் தேயிலைகள் நுழைந்தது தான்.

இதனால் ஏற்றுமதியிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் “இருட்டில் கருப்புச் சட்டையை” தேடுவது எனும் இருளில் சிக்கித் தவித்தனர். அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தங்களை “கடந்த இருண்டகாலத்தை” நோக்கி தள்ளியுள்ளது என்று இந்தியத் தேயிலை சங்கத் தலைவர் அஜய் ஜலான் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “கொரோனா தொற்று“ காலத்தில்  விலை ஏற்றம்  இருந்தது. அதைத் தவிர்த்து கடந்த   பல ஆண்டுகளாக தேயிலை விற்பனையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. தேயிலை சாகுபடிக்கு செலவு அதிகமாகிவிட்டதால் பலர் தேயிலை சாகுபடியை கைவிட்டு விட்டனர். பலர் தோட்டங்களை வேறு நபர்களுக்கு கை மாற்றிவிட்டனர். சில விவசாயிகள் “கிடைக்கும் மானியத்தை” வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் தேயிலை உற்பத்தி, விற்பனை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எதிர்காலத்தை நினைத்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம். சில நிறுவனங்கள் மலிவு விலை தேயிலைகளை நாடிச் செல்கின்றன. இதனால் விலை வீழ்ச்சியடைகிறது. உள்நாட்டுச் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படும் தேயிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 மில்லியன் வரை தேயிலை விற்பனை  அதிகரிக்கும்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியச் சந்தையில்  உள்நாட்டு தேயிலை உற்பத்தி-விற்பனை 3 கோடி  அதிகரிக்கும் என்றார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளில் 55 சதவீதத்தை அஸ்ஸாம் உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2008-ஆம் ஆண்டு 98.1 கோடி (981 மில்லியன்) கிலோவிலிருந்து 39 சதவீதம் அதிகரித்து 2022-ஆம் ஆண்டு 133.6 கோடி (1,336 மில்லியன்) கிலோவாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி  சுமார் 136.5 கோடி (1,365 மில்லியன்) கிலோ வாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

2023 அக்டோபர்  வரை இந்தியாவின் ஏற்றுமதி 18.2 கோடி(182.69 மில்லியன்) ஆக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைவு.  ஆனால், தேயிலை இறக்குமதி 2021-ஆம் ஆண்டு  2.7 கோடி (27 மில்லியன்) கிலோ வாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு இது 3 கோடி(30 மில்லியன்) கிலோவாக அதி கரித்துள்ளது.