பாஜக ஆளும் மாநில அரசு கள் மக்கள் நலன் சார்ந்த பணி களை விட, மோடி அரசின் ஆதரவுடன் மசூதி மற்றும் தர்காக்களில் இந்து கோவில் இரு ப்பதாக கூறி வன் முறையை கட்ட விழ்த்து விடுவதை யே முக்கிய பணி யாக செய்து வரு கின்றன. அயோத்தி பாபர் மசூதியைப் போல காசி (ஞான வாபி), சம்பல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மசூதிகளில் இந்து கோவில் இருப்பதாக கூறி பாஜக கிளப்பிவிட்ட வன்முறையால் உத்தரப்பிரதேச மாநில மே வன்முறை பூமியாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மாண வர்கள் மூலம் மத வன்முறையை தூண்டும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரி வளாகத்தில் உள்ள மசூதியை அகற்றக் கோரி பாஜக- வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி யின் மாணவர்கள் போராட்டம் நடத்தி னர். இந்த போராட்டத்தின் பொழுது கல்லூரி வாசலில் ஏபிவிபி அமைப்பினர் காவிக் கொடிகளுடன் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பி, கல்லூரி வளா கத்திற்குள் நுழைய முயன்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தி, பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.
எனினும் உதய் பிரதாப் கல்லூரி வளா கத்தில் உள்ள மசூதியை அகற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு அறி வித்துள்ளது. இதனால் வாரணாசியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.