நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.,க்கள் நுழைவு வாயிலை மறித்து நின்றார்கள். பாதுகாப்புப் படையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மாடிக்கு செல்ல முயன்றபோது, பாஜக எம்.பி.,யால் தள்ளப்பட்டு நிலைதடுமாறினார். ஆனால் இதனை வேறுவிதமாக திரித்துச் சொல்கிறார்கள்.
திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி
அம்பேத்கர் குறித்து அமித் ஷா தெரிவித்த கருத்துக்கள் தவறுதலாக வெளிவரவில்லை. தவறுதலாக வந்திருந்தால் அவர் மன்னிப்புக் கேட்டிருப்பார். ஆனால் இன்று வரை பாஜகவினர், அமித் ஷாவின் அந்தப் பேச்சுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது அவர்களின் உண்மையான நோக்கத்தை காட்டுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
பாஜக ஒரு பக்கம் மட்டுமே முன்னோக்கிச் செல்கிறது. அந்த பாதை இந்தியாவின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு எந்தவித வாய்ப்பையும் அளிக்கப் போவதில்லை.
சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தைப் போல “ஒரே நாடு ஒரே சாதி”, “ஒரே நாடு ஒரே மதம்” திட்டம் கூட தயார் பண்ணலாம். செயல்முறை வசதி இருந்தா பண்ணிக்க வேண்டியது தானே.
திரைக்கலைஞர் விஜய் ஆண்டனி
5 சுற்று கவுன்சிலிங் முடிந்த போதிலும் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதால் நீட் யுஜி சேர்க்கை க்கான கடைசி தேதியை டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 25,26ஆம் தேதி மற்றும் ஜனவரி 12, 14ஆம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறு முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ஆசிய இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோயல் பார், எல்.நிலாம் தேவி ஆகியோர் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்று, நாட்டின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தியுள்ளனர்.
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதா லாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் டேங்கர் லாரி விபத்து
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூர் அருகே ஆஜ்மீர் நெடுஞ் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனங்கள் மீது கேஸ் டேங்கர் லாரி (சிஎன்ஜி) அதிவேகமாக மோதி வெடித்தது.
இந்த கோர விபத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த 40 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும் 28 பேர் ஆபத்தான நிலை யிலும், 40 பேர் லேசான காயங்களுட னும் ஜெய்ப்பூர் மாவட்ட மருத்துவமனை யில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்த னர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருக்கும் 18 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.