india

img

தென்னிந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவின் சதி முறியடிப்பு

திருப்பதி நெய் பிரச்சனையை வைத்து தென்னிந்தியா வில் பாஜக மத வன்முறை பதற்றத்தை தூண்ட  முயற்சித்தது. கலப்பட நெய்கள் மூலம் தான் தென்னிந்  திய கோவில்களில் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசா தங்கள் வழங்ப்படுகிறது. இதனால் இந்து மதம் புண் படுத்தப்பட்டது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தான் பழனி கோவிலுக்கு நெய் உற்பத்தி செய்கிறது. இதே போல கேரளாவின் சபரிமலை, கர்  நாடகா, தெலுங்கானா கோவில்களில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்கள் பயன்படுத்தபட்ட பிரசாதம் கொடுக்கப்படுகிறது பாஜக பிரச்சனையை பற்ற வைத் தது.

தமிழ்நாடு அரசு தனது உண்மை சரிபார்ப்பு தளத்தின்  மூலம்,”நாங்கள் அரசு நிறுவன மான ஆவின் நெய் மூலமாக மட்டுமே கோவில்களில் பிரசாதம் வழங்குகிறோம்” எனக் கூறியது. அதே போல  கர்நாடகா அரசோ,”எங்களிடம் அரசுக்கு சொந்தமான நந்தினி நெய் உள்ளது. அதன் மூலமாக பிரபல கோவில் களில் பிரசாதம் வழங்குகிறோம். தேவைப்பட்டால் அனை த்து கோவில்களிலும் நந்தினி நெய்யை பயன்படுத்து வோம்” எனக் கூறியது. ஆனால் கேரளா, தெலுங்கானா அரசுகள் பாஜகவின் மத அடிப்படையிலான சதியை கண்டுகொள்ளவில்லை. இதன்மூலம் திருப்பதி நெய் லட்டு மூலமாக  தென்னிந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்  தும் பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.