india

img

புவனேஸ்வர் 40 தொகுதிகள் கூட கிடைக்காது ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை

நாட்டின் கிழக்குப் பகுதி மாநி லமான ஒடிசாவில் கடந்த 20 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். ஒடிசா மாநிலத்தில் மக்  களவை தேர்தலுடன் 18ஆவது சட்டமன்ற தேர்தலும் திங்களன்று  தொடங்கியது. மொத்தமுள்ள 147  சட்டமன்ற தொகுதிகளில் மக்க ளவை தேர்தல் போல 4 கட்டமாக சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்  குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 28 சட்டமன்ற மற்  றும் 5 மக்களவை தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடை பெற்றது.

இந்நிலையில், தேர்தல் வாக் குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் யார்  ஆட்சி அமைப்பார்கள்? மக்களவை  தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதி யை கைப்பற்றும்? என்ற கருத்துக் கணிப்பு முடிவை ஜீரோ கிரவுண்ட் நிறுவனம் வெளியிட்டது. அதில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஆளும் பிஜு ஜனதா தளம் 104  தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் 5ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்  றும், பாஜக 30 தொகுதிகளை மட்  டுமே கைப்பற்றும் என்றும், கடந்த  தேர்தலை விட “இந்தியா” கூட்டணி கூடுதலான தொகுதிகளை கைப்  பற்றி, 13 தொகுதிகளை வெல்ல  வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு  முடிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களவை தேர்தலுக்கான ஜீரோ  கிரவுண்ட் கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் கட்சி 15 தொகுதி களையும், பாஜக 5 தொகுதிகளை யும், “இந்தியா” கூட்டணி ஒரு  தொகுதியையும் வெல்ல வாய்ப்  புள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. 

ஒடிசாவில் ஜூன் 4 அன்று பாஜக  சார்பில் முதல்வர் பொறுப் பேற்பார், இனி ஒடிசா மாநிலமே பாஜகவின் கையில்தான் என அம்மாநிலத்தில் நடைபெற்ற  பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ஆனால் கருத்  துக்கணிப்பில் கூட பாஜக ஆட்சிக்கு  வாய்ப்பில்லை என்ற தகவல் வெளி யாகியுள்ளதால், பாஜகவினர் கலக்  கத்தில் உள்ளனர்.

“இந்தியா” கூட்டணிக்கு பெருகும் ஆதரவு

ஒடிசா மாநிலத்தில் கடந்த காலங்களை விட 2024 மக்க ளவை, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி கட்சிகளின் வாக்குச் சதவீதம் கணிச மாக உயரும் என ஜீரோ கிரவுண்ட் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்  ளது. சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதிகளை “இந்தியா” கூட்டணி கைப்பற்றும் எனக் கூறப்பட்டாலும், 4 கட்ட தேர்தல் முடிவில் “இந்தியா” கூட்டணி வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை 20ஐ  நெருங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல மக்க ளவை தேர்தலிலும் “இந்தியா” கூட்டணி வெல்லும் தொகுதி களின் எண்ணிக்கை சற்று மாறுபடும் என்றும் ஜீரோ கிரவுண்ட் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.