புதிய பி.எஃப் 7 ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பி.எஃப் 7 (BF7) ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நோய் பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.