india

img

மசூதிகளை இடித்து கோவில்கள் கட்டப்பட்டதாம் பஜ்ரங் தளம் தலைவர் வெறிப் பேச்சு

மசூதிகளை இடித்து தான் கோவில் கள் கட்டப்பட்டன என பஜ்ரங் தளம் தலைவர் பிரவீன் தொகாடி யா வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் பில்சி பகுதியில் நடை பெற்ற நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில், “முகலாயர் ஆட்சியில் கட்டப்பட்ட மசூதி கள் அனைத்தும் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை ஆகும். மசூதிகள் கட்டுவ தற்காக இடிக்கப்பட்ட 12,000 கோவில்க ளின் பட்டியல் என்னிடம் உள்ளது. இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை கும்பமேளா முடிந்த பின் அறிவிப்பேன்” என அவர் கூறினார். பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான பிரவீன் தொகாடி யாவின் இந்த வெறுப்புப் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.