india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுதில்லி, மே 10- மோடி அரசால் அரசியல் அடக்கு முறையின் ஒருபகுதியாக கைது  செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தில் பங்கேற்க முடியாதபடி தடுக் கும் முனைப்பிலும், தில்லியில் ஆட்சி யைக் கவிழ்க்கும் நோக்கத்துடனும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களை சிறை யில் அடைத்தது போல அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல் வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடையதாக கூறி கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறை மூலம் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. இந்நிலையில், தில்லி திகார் சிறையிலிருந்து அவர் முதல்வர் பொறுப்பை கவனித்து உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

அமலாக்கத்துறை தன்னைக் கைது செய்ததைச் சட்டவிரோதமென அறிவிக்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் கெஜ்ரிவால். இரண்டு கட்ட விசாரணைக்குப் பிறகு  இடைக்கால நிவாரண விசாரணையாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா  மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் வெள்ளியன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் சிங்வி, “மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால நிவார ணமாக ஜூன் 5 வரை ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத் தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம லாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,”தேர்தல் பிரச்சாரத்துக் காக இடைக்கால ஜாமீன் வழங்கி னால், அரசியல்வாதிகள் யாரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியாது. தேர்தல் பிரச்சார அடிப்படையில் கெஜ்ரிவா லுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என வாதிட்டார். 

அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி கெஜ்ரிவாலுக்கு ஜூன்  1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர். ஜாமீன் வழங்கப்பட்டாலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். அதில்,”கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற் கொள்ளலாம். ஆனால் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலு வலகத்துக்கோ, தலைமைச் செயல கத்துக்கோ அவர்  செல்லக்கூடாது. துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி இல்லாமல் கெஜ்ரிவால் எந்த அலுவலக கோப்பு களிலும் கையெழுத்திடக்கூடாது. ஜூன் 2 அன்று நீதிமன்றத்தில் சரண டைய வேண்டும்” என பல்வேறு நிபந்த னைகளை விதித்துள்ளனர். 

கெஜ்ரிவால் ஜாமீன் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். உச்சநீதிமன்ற உத்தர வுக்கு பிறகு வெள்ளியன்று இரவு 7:30  மணியளவில் கெஜ்ரிவால் சிறையை விட்டு வெளியே வந்தார்.