india

img

வேகமாக உயரும் அரிசி விலை

ஒன்றிய பாஜக அரசின் மோசமான வேளாண் கொள்கைகள் கார ணமாக - குறிப்பாக உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, உத்தர வாதமற்ற கொள்முதலை காரணமாக நெல் சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வரு கிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளா கவே அரிசி உள்ளிட்ட தானியங்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

நடப்பாண்டில் மட்டும் 26 கிலோ அடங்கிய அரிசி மூட்டைக்கு சுமார் 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டிலும் எதிரொலித்து சாமானிய மக்க ளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்ற னர் ஆலை வியாபாரிகள், மொத்த விற்பனையா ளர்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணச்ச நல்லூர், அரியமங்கலம், காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. இந்த அரிசி ஆலைகளுக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து தான் நெல் வருகிறது. தவிர, கர்நாடகாவின் பல்வேறு பகுதி களில் இருந்து அரிசியைக் கொள்முதல் செய்து,  அதை கர்நாடகப் பொன்னி உள்ளிட்ட பல்வேறு  பெயர்களில் ரகம் வாரியாக வியாபாரிகள் விற்கின்றனர்.

2022 ஆம் ஆண்டு இதே காலகட்டம் வரை  கட்டுப்பாட்டில் இருந்த  அரிசி விலை கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகப் பொன்னி என்று அழைக்கப்படும்  ஆர்என்ஆர் ரகம் ஒரு கிலோ ரூ.46க்கு விற்கப் பட்டது. ஞாயிற்றுக்கிழமை சில்லரைச் சந்தைக ளில் இது  கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், மணச்ச நல்லூர் பொன்னியின் விலை (ஒரு வருட ரகம்) கிலோ ரூ.65 ஆக உள்ளது.  மொத்தச் சந்தையில் பொதுவாக அரிசி  (சற்று பெரியது) ஒரு கிலோ ரூ.46-இல் இருந்து  ரூ.51 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்க ளிலிருந்து நெல் வரத்துக் குறைவாக இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.  கடந்த சில மாதங்களாக டெல்டா பகுதி யில் இருந்து வரத்து குறைந்துள்ளது.

இதே போல் கர்நாடகாவிலிருந்து வரத்துக் குறைந் துள்ளதால், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் இரண்டா வது நெல் சாகுபடிக்கு செல்லவில்லை. திருச்சிராப்பள்ளி முதல் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வரை  பெரும்பாலான விவசாயிகள் நெல் (சம்பா பருவம்) சாகு படியை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்டங்களிலிருந்து நெல் வரத்து இல்லை.

நெல் பற்றாக்குறை விவசாயிகளை மட்டு மல்ல, ஆலை உரிமையாளர்கள் மற்றும் தினந் தோறும் ஒரு கிலோ, இரண்டு கிலோ அரிசி வாங்கு வோரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.  இது குறித்து மணச்சநல்லூர் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.சிவானந்தம் கூறுகையில் “ ஆலைகளை அவற்றின் திறனுக்கு ஏற்றவாறு இயக்க முடிய வில்லை.

கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடு கையில், 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் இது ஒரு அரிதான நிகழ்வு’’ என்கிறார்.  2024-25 ஆம் ஆண்டில் அடுத்த சம்பா பருவம் வரை பொன்னி போன்ற பிரபலமான ரகங்க ளுக்காக ஆந்திரா, கர்நாடகா,  தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து வரும்  நெல்லைத் தான் அரிசி ஆலைகளும், வணிகர்களும் நம்பி யிருக்க வேண்டும். இதன் விலை மேலும் அதிக ரிக்கவும் வாய்ப்புள்ளது.

“பாரத் அரிசி” உண்மையா? ஏமாற்றும் தந்திரமா?

பொதுச் சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் மின்-ஏலத்தில் இந்திய உணவுக் கழ கத்தின் அரிசியை விற்பனை செய்வதன் மூலம் உள்நாட்டு இருப்பை அதிகரித்து, சில்லரை அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவு அமைச்சகத்தின் முயற்சி தோற்றுப் போனது.

இதையடுத்து நாட்டில் அரிசி விலையேற்றத்தைத் தடுக்க இந்திய உணவுக் கழகத்திடம் இருக்கும் கையிருப்பை சில்லரைச் சந்தையில் ‘பாரத்’ அரிசி என்று மலிவு விலையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய உணவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், ‘பாரத்’ அரிசி-யின் தள்ளுபடி விலை குறித்து இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்பட வில்லை. பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ அரிசி (இருப்பு விலை) ரூ.29-க்கு இந்திய உணவுக் கழகம் விற்று வருகிறது. அதே விலையில் பாரத் அரிசியை விற்பனை செய்வதா அல்லது மேலும் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வதா என முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது ஒன்றிய அரசு.