புதுதில்லி, ஜன. 18 - குஜராத்தில் பில்கிஸ் பானு கும்பல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் சரணடைவதற்கு கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ஜனவரி 8 அன்று அதிரடியாக ரத்து செய்தது.
அத்துடன், குற்றவாளிகள் 11 பேரும், 2 வாரங்களுக்குள் சிறை நிர்வாகத்திடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகி விட்டதாக குஜராத் மாநில பாஜக அரசு கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்களால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் மீண்டும் சிறைக்கு அனுப்பக் கூடாது என்ற பிடிவாதம் காரணமாக, ‘குற்றவாளிகள் தலைமறை வாகிவிட்டனர்’ என்பதாக குஜராத் பாஜக அரசே ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் சரணடைவதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன.21) முடிவடைய உள்ள சூழலில், பில்கிஸ் பானு வழக்கின் 3 குற்றவாளி கள், தாங்கள் சரணடைய 4 முதல் 6 வாரங்கள் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். எனினும், தலைமை நீதிபதியின் உத்தர வுக்குப் பிறகே இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் எனத் தெரிகிறது.