india

img

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல்

புதுதில்லி, செப். 4 - இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்று மதி செய்வதற்கான அனைத்து உரி மங்களையும் ரத்து செய்ய இந்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

“காசா மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவது, சர்வ தேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பிரிவு கள் வலியுறுத்தும் இந்தியாவின் கட மைகளுக்கு முரணானது” என்று மனுக் களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“காசா மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவது, சர்வ தேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பிரிவு கள் வலியுறுத்தும் இந்தியாவின் கட மைகளுக்கு முரணானது” என்று மனுக் களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“சர்வதேச அளவில் ஒப்புக் கொண்டு இந்தியா கையெழுத்திட்டுள்ள மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை யில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவிலி ருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயு தங்கள், பாலஸ்தீனத்திற்கு எதிராக போர்க் குற்றங்களை நிகழ்த்துவதற்கு பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால், ​​இஸ்ரேலுக்கு இந்தியா எந்த ராணுவ உபகரணங்களையும் அல்லது ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது” என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், “ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை காசா பகுதியில் கொன்று  குவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளே பெரும் பான்மையானவர்கள்.

அவ்வாறிருக்கையில், பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட இந்தி யாவைச் சேர்ந்த எந்தவொரு நிறு வனங்களும் இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவது, சர்வதேச சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளுடன் இணைந்து இந்தியா வின் கடமைகளை மீறுவதாகும். 

காசாவில் நடந்து வரும் போரின் இந்த காலத்திலும் கூட, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கையாளும் மூன்று நிறுவனங்களுக்கு, ‘இஸ் ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்றுமதி செய்வதற் கான உரிமம்’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரிமங்கள் இரட்டை பயன்பாட்டிற்காக மற்றும் குறிப்பாக இராணுவ நோக்கங்களுக்காக, ஆயு தங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கும் வெளி நாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அல்லது பாதுகாப்பு உற்பத்தித் துறை  (DDP) ஆகியவற்றிடமிருந்து பெறப் பட்டுள்ளன.

2024 ஜனவரியில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனமான ‘மியூனிஷன் இந்தியா லிமிடெட்’, இஸ்ரேலுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. அந்த நிறு வனம் 2024 ஏப்ரலில் மீண்டும் அதே தயாரிப்பை இஸ்ரேலில் இருந்து மீண் டும் ஆர்டரின் கீழ் ஏற்றுமதி செய்ய விண்ணப்பித்து, தற்போது உரிம அதி காரிகளின் பரிசீலனையில் உள்ளது.

டிஜிஎப்டி-யின் சிறப்பு இரசாய னங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ங்கள் (SCOMET) பிரிவுக்கு அனுப்பப் பட்டுள்ள இந்த விண்ணப்பம், இரட்டைப் பயன்பாட்டு வகையின் கீழ் வரும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்றுமதி செய்வதற் கான உரிமங்களை அங்கீகரிக்கிறது.

பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமி டெட் (PEL) என்ற இந்திய தனியார் நிறு வனம், டிஜிஎப்டி(DGFT)-இன் சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் (SCOMET) உரி மத்தின் கீழ், இஸ்ரேலுக்கு வெடி பொருட்கள் மற்றும் அதனுடன் தொட ர்புடைய துணைப் பொருட்களை 2021 முதலே ஏற்றுமதி செய்து வருகிறது. 

கடந்த ஆண்டு காசா மீதான இஸ்ரே லின் போர் தொடங்கியதில் இருந்து 2023 நவம்பர் 20, 2024 பிப்ரவரி 1  ஆகிய தேதிகளிலும் அனுமதி பெற்று  ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வரு கிறது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்டதும், பெரும்பான்மையான பங்குகளை அதானி குழுமம் கொண்டிருக்கும் கூட்டு நிறுவனமான அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட், 2019  மற்றும் 2023-க்கு இடையில் இஸ்ரே லிய இராணுவத்திற்கு ஹெர்ம்ஸ் 900 யுஏவிகள்/இராணுவ டிரோன்களை ஏற்றுமதி செய்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டம், போர்களுக்கு வரம்புகள் இருப்பதை அங்கீகரிக்கவும், அரசுகளின் நடத்தை யை ஒழுங்குபடுத்தவும் கட்டாயப் படுத்துகிறது. அதன்படி போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ள அரசு களுக்கு ராணுவ ஆயுதங்களை வழங் கக்கூடாது என்று கட்டாயப்படுத்தும் பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும்  ஒப்பந்தங்களுக்கு இந்தியா கட்டுப் பட்டிருக்கிறது.

அந்த வகையில், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு தற்போது ஆயு தங்கள், தளவாடங்களை ஏற்றுமதி செய்வதானது, சர்வதேச மனிதாபி மான சட்டத்தோடு உடன்படும் இந்திய அரசியலமைப்பின் 51(c) மற்றும் 14  மற்றும் 21-ஆவது பிரிவுகளின் படி  இந்தியா தனது கடமைகளை மீறுவ தாகும். எனவே, தற்போதுள்ள ஆயுதங்கள் ஏற்றுமதிக்கான உரி மங்களை ரத்து செய்வதற்கும், இந்தி யாவில் உள்ள பல்வேறு நிறு வனங்களுக்கு ஆயுத ஏற்றுமதிக்காக புதிய உரிமங்கள் மற்றும் அனு மதிகளை வழங்குவதை நிறுத்து வதற்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.