india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் மேல்முறையீடு நிராகரிப்பு

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வ தேச ஒலிம்பிக் சம்மேள னத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி மேல்முறையீடு செய்தது. ஆனால் இதனை  சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஏற்கவில்லை. மாறாக, வினேஷ் போகத்திடம் அரையிறுதியில் வீழ்ந்த கியூபாவின் குயுஜ்மான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஒன்றிய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி வலியறுத்தல்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நாடாளுமன்ற மக்க ளவையில்  “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 

மேலும் டுவிட்டர் எக்ஸ் பதிவுகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புகளில், வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் சதி இருப்பதாக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளன. “பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் சதி உள்ளது. வினேஷ் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடி யாதோ அவர்கள் தான் சதி செய்தி ருப்பர்” என காங்கிரஸ் கட்சி தனது  அறிக்கை மூலம் விமர்சனம் செய்துள்ளது. “வினேஷ் போகத் தகுதி நீக்கத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்” என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும் வலியுறுத்தியுள்ளார்.