ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற் கரையில் இயற்கை சீற்றம் எதுவும் இல்லாத நிலையில், திடீரென 400 மீட்டர் அளவில் கடல் நீர் உள்வாங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் உயிரிழந்தனர்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் தற்போது லே, கார்கில் என 2 மாவட்டங்கள் உள்ள நிலையில், ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நாடாளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.,யான வசந்த் சவான் (69) திங்களன்று காலமானார்.
தில்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப் பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து துப்பாக்கி கள், கார் ஆகியவற்றை தில்லி போலீஸ் பறிமுதல் செய்தது.
நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால் மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் செவ்வாயன்று கூட உள்ளது. கொச்சியில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்லால், தற்காலிக பொ துச்செயலாளர் பாபுராஜ், துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ், நடிகைகள் அன்சிபா ஹசன், அனன்யா, ஜோ மோள் உள்ளிட்ட நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
கேரள நடிகைகள் கூட்டமைப்பை ஆத ரித்ததற்காக தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக நடிகை பாக்கிய லட்சுமி புகார் அளித்துள்ளார்.
“விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கதேச சூழல் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும்”என நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கங்கனா ரணாவத் எம்.பி. கருத்திற்கும் எங்க ளுக்கும் தொடர்பில்லை என பாஜக விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கன மழைக்கே பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வரும் நிலையில், மேலும் 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அம்மாநில மக்களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்
கேரள திரையுலகில்
பாலியல் சுரண்டல்
சிறப்பு புலனாய்வுக்குழு இன்று கூடுகிறது
கேரள திரைத்துறையில் அரங் கேறும் பாலியல் சுரண்டல்கள் தொடர்பாகவும், நடிகைக ளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச் சாட்டுகள் தொடர்பாகவும் விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட் டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று அறிவித்தார். கேரள காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக் குழுவில் 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி கள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வுக்குழு செவ் வாயன்று கூடி விசாரணையை தொடங்கு கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள குறிப்புகள் தொடர்பாகவும், விசாரணைக் குழு முன் சாட்சியம் அளித்தவர்களை சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களை சிறப்பு புலனாய்வுக்குழு பதிவு செய்யும். சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள பெண் அதிகாரிகள் புகார்தா ரர்களின் வாக்குமூலங்களை பதிவு செய் வார்கள். போக்சோ சார்ந்த குற்றமாக இருந்தால், புகார் இல்லாமல் கூட வழக்கு பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக நீதி பதி ஹேமாவிடம் இருந்து தகவல்பெறப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.