சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2027-க்குள் இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100 சதவிகிதம் அதிகரிக்கும்; மிகப்பெரிய கடன் வலையில் இந்தியா சிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்ச ரித்த சர்வதேச நாணய நிதியம், ஒன் றிய நிதி அமைச்சகம் புதிய திட் டங்களை கொண்டு வர வேண்டும் எனவும், தனியார் துறைகளில் முத லீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
ஆனால், ஐஎம்எப்-பின் இந்த எச்சரிக்கைக்கு ஒன்றிய நிதிய மைச்சகம் மறுப்பு தெரிவித்தது. “இந்தியாவின் கடன் குறித்து பேசி யிருக்கும் ஐஎம்எப், சில விஷ யங்களை பாசிட்டிவாக கூறியிருப் பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்பட்டால், கடன் 70 சதவிகிதத்திற்கும் குறை வாகவே இருக்கும் என ஐஎம்எஃப் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல உள்நாட்டு கடன் பற்றி கவலைப்பட வேண்டாம். அதனால் பெரும் ஆபத்து ஏற்படாது. 2020-21 நிதி யாண்டில் 88 சதவிகிதமாக இருந்த கடன், 2022-23 நிதியாண்டில் 81 சத விகிதமாகக் குறைந்துள்ளது என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கடன் குறித்த அச்சம் தேவையற்றது” என்று கூறி யிருந்தது.
ஆனால், ஐஎம்எப் எச்சரிக்கை முக்கியமானது. அது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். ஆசிய கண்டத்தில் மிக முக்கியமான வணிக தளமாக இந்தியா இருக்கிறது. இதற்கு கார ணம் இங்குள்ள மக்கள் தொகை தான். உலகின் மிக அதிகமாக மக் கள் தொகை கொண்ட இந்த நாட்டில், வாங்கும் சக்தியும் அதி கம். எனவே, உலகின் ஏறத்தாழ அனைத்து உற்பத்தி நிறுவனங்க ளும் இந்திய சந்தையை கைப்பற்ற போட்டிப்போட்டுக் கொண்டிருக் கின்றனர்.
ஆனால், உண்மையில் இந்திய மக்களின் வாங்கும் திறன் கடந்த சில ஆண்டுகளாக சரிந்துள்ளது. அல்லது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் தங்கம், வைரம், நிலங்கள், விலையுயர்ந்த கார்கள், கட்டடங்கள், ஆடம்பர சொகுசு வீடுகள் என அனைத்து சொத்துக்களிலும் 40 சதவிகிதம், நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே பெரும்பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கிறது. இவர்கள்தான் நாட் டின் பெரும் பணக்காரர்கள். மறு புறமோ, நாட்டு மக்கள் தொகை யில் சரிபாதியாக உள்ள- அதாவது 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகித செல்வம்தான் இருக்கி றது. எனவே, இந்த மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறித்தான் அரசுகள் தொடர்ச்சியாக கடனை வாங்கி குவித்து வருகின்றன. இது ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தை எட் டும்போது, இந்தியாவும், இலங்கை யைப் போல பொருளாதார பிரச்ச னையில் சிக்கும் என்பதைத்தான் ஐஎம்எப் சூசகமாக எச்சரித்திருக்கி றது என்று பொருளாதார ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.