பெர்ன், மார்ச் 22- காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றி யமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக் ரோகிராம்களுக்கு குறை வாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் உலக சுகா தார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாது காப்புக்காக பரிந்துரைக்கப் பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. இதுகுறித்து உலகம் முழு வதும் சுமார் 6,475 நகரங் களில் மாசு தரவுகளின் கணக் கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி உலக சுகா தார அமைப்பால் காற்று மாசு பாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி 2021- ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மாசு அளவு மேலும் மோசமடைந்துள்ளது. உலகின் மிகவும் காற்று மாசு பட்ட தலைநகரமாக இந்தியா வின் புதுதில்லி உள்ளது. உல கில் அதிக காற்று மாசுபாடு உள்ள நாடாக வங்காள தேசம் உள்ளது.