நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு நொடிக்கு இரண்டரை பிரியாணி வரை ஆர்டர் செய்யப்பட்டு வருவது சுவிக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் தெரிகிறது. இந்நிலையில், இந்தியாவின் பிரி யாணி தலைநகரமாக ஹைதராபாத் நகரம் உரு வெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரத்தில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த ஓராண்டில் மட்டும் 1 கோடி பிரியாணிகள் கடைகளில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் 3-ஆவது இடத்தில் தமிழ்நாடு தலைநகர் சென்னை உள்ளது.
ஆந்திராவுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள் வதற்காக பிரதமர் மோடி இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் பயணித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக புகார் எழுந்துள் ளது. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேத் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே திங்க ளன்று சபர்மதி – ஆக்ரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இன்ஜின் மற்றும் 4 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், லேசான காயத்துடன் பயணிகள் உயிர்தப்பினர்.
பணமோசடி வழக்கு தொடர்பாக திகார் சிறை யில் உள்ள தில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ என்ப வர் தனது பையிலிருந்த ரூ.2000 பணம் மாயமான விவகாரத்தில், அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது புகார் கூறி சக மாணவி களை வைத்து ஆடையை களைய வைத்து நிர்வா ணமாக சோதனை நடத்தியுள்ளார். இந்த விவகா ரத்தால் மனமுடைந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க் கண்ட், உத்தரகண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கள் கட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பிலான தேர் தல் பத்திரங்களை வழங்கிய நன்கொடையா ளர் யார் என தெரியவில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா
மேற்குவங்க டிஜிபி மாற்றம்
42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக மக்க ளவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மக்களவை தேர்தல் போன்று வன்முறை சம்பவங்கள் அரங்கேறாமல் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு நிகழ்வை உறுதிசெய்ய வேண்டும் என 2 வாரத்திற்கு முன்பு மேற்குவங்க தலை நகர் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மக்களவை தேர்த லுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய இந் திய தலைமைத் தேர்தல் ஆணையம் திடீ ரென உத்தரவிட்டுள்ளது. புதிய டிஜிபி யாக விவேக் சகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுதில்லி
அமலாக்கத்துறை சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்தார்
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை மூலம் கைது செய்ய மோடி அரசு துடியாய்த் துடித்து வருகிறது. ஏற்கெ னவே மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தற்போது புதிதாக தில்லி நீர் வாரிய (ஜல் வாரியம்) பண மோசடி வழக்கு தொடர் பாகவும் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்ம னில் திங்களன்று (மார்ச் 18) கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு இருந் தது. இந்நிலையில், தனக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ள நீர் வாரிய பண மோசடி வழக்கு தொடர்பான சம்மன் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த சம் மனை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.
குழப்பம்
தில்லி நீர் வாரிய பண மோசடி வழக்கு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது. காரணம் இந்த சம்மன் அனுப்பிய விவகாரம் வெளியில் அவ்வ ளவாக கசியவில்லை. மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக சம்ம னோடு சேர்த்துதான் நீர் வாரிய வழக்கு சம்மனும் செய்தியாக வெளிவந்தது. நீர் வாரிய வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் அடுத்த வாரம் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில், திங்க ளன்று கெஜ்ரிவால் சம்மனை புறக்க ணித்த பின்புதான் நீர் வாரிய வழக்கில் அவர் அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என்று செய்தியாக வெளியே வந்துள்ளது.