பீகார் கன்வார் யாத்திரையில் விபத்து9 பேர் பலி
பீகார் மாநிலம் வைஷாலி அருகே கன்வார் யாத்திரை மேற்கொண்ட வர்கள் டிஜே (DJ) வாகனத்துடன் (பாடல்கள் ஒலிக்கப் படும் ஸ்பீக்கர் அடங் கிய வாகனம்) சோன் பூர் பாபா கைகர்நாத் பகுதியை நோக்கிச் சென்றார்கள். ஹாஜி பூர் அருகே சென்ற பொழுது டிஜே வாக னம் மீது உயர் அழுத்த மின்சார கம்பி உரசியது. இதனால் வாகனத்தில் சென்ற 11 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப் பட்டனர். இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள், படுகாய மடைந்தவர்கள் அனைவரும் சுல்தான் பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹாஜிபூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுதில்லி
“10 ஆண்டுகளில் 10,635 பேர் வெப்ப அலையால் உயிரிழப்பு”
மக்களவையில் திமுக நாடாளு மன்றக் குழுத் தலைவர் கனி மொழி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலை காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ஒன்றிய அறிவியல் - தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ”நாடு முழுதும் வெப்ப அலைகளால் 2013 இல் 1,216 பேரும், 2014 இல் 1248 பேரும், 2015இல்1908 பேரும், 2016 இல் 1338 பேரும், 2017இல் 1127 பேரும், 2018இல் 890 பேரும், 2019இல் 1274 பேரும், 2020இல் 530 பேரும், 2021இல் 374 பேரும், 2022இல் 730 பேர் என 10 ஆண்டுகளில் 10,635 பேர் வெப்ப அலையால் உயிரிழந்தனர். அதிக பட்சமாக ஆந்திராவில் 2,203 பேரும், குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்” என அவர் கூறினார்.
கோழிக்கோடு
வயநாடு மக்களுக்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கும் கேரள தொழிலதிபர்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற் பட்ட நிலச்சரிவில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வீடு களை இழந்து இயல்பு நிலையை இழந்துள்ள நிலையில், தனக்குச் சொந்தமாக இருக்கும் 1000 ஏக்கர் நிலத்தில் 100 பேர் வீடுகளை கட்டிக்கொள்ள கேரள தொழிலதிபர் பாபி செம்மனூர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக பாபி செம்மனூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”காலம் முழுக்க உழைத்து வீட்டை கட்டிய வய நாடு மக்கள் நிலச்சரிவில் அனைத்தை யும் இழந்துள்ளனர். அவர்களுக்கு என் நிலத்தில் இருந்து 100 வீடுகள் கட்டிக் கொள்ள 1000 ஏக்கர் நிலத்தையும் வழங்க உள்ளேன். இது தொடர்பாக கேரள அமைச்சர்களிடமும் பேசியுள்ளேன். வீட்டை தொலைத்து விட்டு எங்கு செல் வோம் என்று நினைப்பவர்களுக்கு உதவே இந்த முயற்சி. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து சரியானவர்க ளுக்கு நிலம் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கும் உதவ இருக்கிறோம். மீட்பு பணிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்”என அவர் கூறினார். தொழிலதிபர் பாபி செம்மனூரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த பாராட் டுகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர்.
முன்னாள் கால்பந்து வீரரான தொழி லதிபர் பாபி செம்மனூர் தங்க நகைக் கடை, தங்க நகை பைனான்ஸ், வெளி நாட்டு முதலீடு வர்த்தகம் உள்ளிட்ட பல் வேறு தொழில்களை கையாண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளாவில் செம்மனூர் பைனான்ஸ் என்ற பெயரில் இவருக்கு ஏராளமான கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.