india

5 மற்றும் 8-ஆம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சி ரத்து! ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு ஒன்றிய அரசுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

புதுதில்லி, டிச. 23 - பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரவிருக்கும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படும். ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடி யும். துணைத் தேர்விலும் தோல்வி  அடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும். மாணவர் களின் கற்றல் திறனை அதிகரிப்ப தற்காக தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் தொடக்கக் கல்வி முடியும் வரை  எந்தப் பள்ளியிலிருந்தும் குழந்தை களை வெளியேற்றக் கூடாது” என கூறப்பட்டுள்ளது. 5, 8-ஆம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்துக்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. இந்த முடிவு பின்தங்கிய- கிராமப்புற மாணவர்களின் கல்வி  பெறும் உரிமையைப் பறிப்பது டன், இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.