உலகத்தைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டம், அது தொடக்க நிலையிலிருந்தாலும் கூட, தொடர்ந்து நிலவிக் கொண்டே உள்ளது. இக்கண்ணோட்டம் எப்போதாவது செயல்பாட்டில் பளிச்சென்று வெளிப்படுகிறது. ஆளும் வர்க்கம் தன் கையிலிருக்கும் பண்பாட்டு ஆதிக்கத்தைக் கொண்டு கரு நிலையில் உள்ள இந்த ‘கண்ணோட்டத்தை” அடக்கவோ, அழிக்கவோ பாடுபடுகிறது. இந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்னவெனில், சாதாரண மனிதனின் இக்கண்ணோட்டம் கருநிலையிலிருந்து வளர்ந்து, முழுமை பெற்று, வரலாற்றினால் அவனுக்கு உள்ள கட்டமைப்பை அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதேயாகும்.
- அந்தோணியோ கிராம்சி -