விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கு வதற்கான பட்ஜெட் என்றும் விவசாயி கள் நலன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப் படாத பட்ஜெட் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. சங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒன்றிய பட்ஜெட் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அதிகாரத்தை மத்தியில் குவிப்பதற்கு வழிவகுத்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கும், வேளாண்வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும் வழிவகுத்திடும் பட்ஜெட்டுமாகும்.
நிதி ஒதுக்கீடு குறைப்பு
மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்யும்தொகை 2019இலிருந்தே தொடர்ந்து வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. இப்போது 5.44 விழுக்காட்டிலிருந்து 3.15 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. 2022-23உடன் ஒப்பிடுகையில் 21.2 விழுக்காடு அளவிற்கு விவசாயம் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. விளைபொருள்களுக்கு சி2+50% அளவில் விலை நிர்ணயம் செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட வில்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம், பிரதமர்-கிசான் மற்றும் பிரதமர் பயிர்காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றிற்கும் ஒதுக்கீட்டில் எவ்வித உயர்வும் இல்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவ சாயத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகக் கூறி யுள்ள போதிலும், நடைமுறையில் அவர் வேளாண் கார்ப்பரேட்டுகளுக்கே முன்னுரிமை கொடுத்துள் ளாரே தவிர, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எவ்வித முன்னுரிமையும் அளித்திட வில்லை.
கூட்டாட்சி உரிமை மீறல்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீடு அதி கரிக்கப்படவில்லை. இதற்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 86 ஆயிரம் கோடி ரூபாயில் ஏற்கனவே 42 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. மீதம் உள்ள எட்டு மாதங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய்தான் பாக்கி இருக்கிறது. இதிலிருந்து பாஜக வின் அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனையில் எந்த அளவிற்கு உணர்ச்சியற்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது விவசாய நெருக்கடியை அதிகரித்திடும், கிராமப்புறங்களிலிருந்து மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலையை உருவாக்கிடும்.
பயிர் வளர்ப்பு மற்றும் ரசாயன உரங்களுக்கான ஒதுக்கீடுகளிலும் பெரிய அளவிற்கு வெட்டு விழுந்திருக்கிறது. பயிர் வளர்ப்புக்கான ஒதுக்கீட்டில் 24.7 விழுக்காடும், உரங்களுக்கான ஒதுக்கீட்டில் 34.7 விழுக்காடும் வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2022-23 ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது சுமார் 87,238 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இது விவசாய உற்பத்தியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஒத்துழைப்புக் கொள்கை (National Cooperation Policy) மாநிலங்களின் உரிமைகளில் கை வைத்திடுவதாகும். ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் அனைத்துக் கூட்டுறவு சங்கங்களையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கையேயாகும். இது மாநி லங்களின் கூட்டாட்சி உரிமைகளை மீறும் செயலாகும்.
தனியார் நிறுவனங்களுக்கு வாயில் திறப்பு
பட்ஜெட்டில் பொதுத்துறை வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் பேயர் (Bayer), அமே சான் (Amazon) போன்ற தனியார் வேளாண்வர்த்தக நிறுவனங்கள் புகுவதற்கு வழிதிறக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக வேளாண் ஆராய்ச்சியின் திசைவழி படிப்படியாக தனியார் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும்.
விவசாயத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அமல்படுத்துவதற்கு முன்மொழிவு அளிக்கப் பட்டிருக்கிறது. இதன்கீழ் 6 கோடி விவசாயிகள் மற்றும் அவர்களுடைய நிலங்கள் கொண்டுவரப்பட இருக்கிற தாம். இது ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திடும்.
பட்ஜெட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கு உத்தவாதமளித்த கட்டு படியான விலையை நிர்ணயித்திட எவ்வித நடவடிக்கை யும் இல்லை. இதற்குச் சரியான கொள்கை திசை வழியில்லாத நிலையில், இதுதொடர்பான உறுதி மொழிகளால் எவ்விதப் பயனும் ஏற்படாது.
ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகளின் எந்தப்பிரச்சனையையும் தீர்ப்பதற்கு வழிவகை செய்திடாமல் தோல்வியடைந்திருக்கிறது. வேளாண்மையை கார்ப்பரேட்டுகள் கைகளில் ஒப்படைப்பதற்கான உந்துதல் இந்த பட்ஜெட்டில் காணப்படுகிறது.
எனவே விவசாயிகள், தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு அனைத்துக் கிளைகளுக்கும் அகில இந்திய விவசாயி கள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)