india

img

கோவிட்-19 : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,851 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,851 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,02,767 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,93,212 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,52,608 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,10,960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 77,793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,710 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 27,256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 220 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 25,004 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 650 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 18,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

;